காஸா போர் குறித்து முன்னாள் அதிபர் ஹலிமா கருத்து

உலக நாடுகள் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பக்கம் நிற்கவேண்டுமென சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நடக்கும் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30,000ஐ எட்டியுள்ள நிலையில், உலக நாடுகள் கடைப்பிடிக்கும் அறக்கொள்கை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஸாவில் போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நிலவும் குழப்பத்தைத் தமது ஃபேஸ்புக் பதிவில் சுட்டிய திருவாட்டி ஹலிமா, அனைத்துலகச் சட்டங்களும் அமைப்புகளும் பொருத்தமற்றதாகிவிட்டன என்றார்.

“இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட பயங்கரங்களுக்குப் பிறகு, போர்ச்சூழலில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் காணப்பட்ட இணக்கம் தற்போது மிகவும் வலுவிழந்துவிட்டது. உலகம் தற்போது மாறிவிட்டது,”என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாட்டி ஹலிமாவின் இந்த ஃபேஸ்புக் பதிவை, சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், “முன்னாள் அதிபர் ஹலிமா ஆணித்தரமாக முன்வைத்துள்ள கருத்துடன் உடன்படுகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!