மாதாந்தர குடும்ப வருமானம் 5,000 வெள்ளி அல்லது அதற்குக் கீழ் ஈட்டக்கூடிய சிங்கப்பூர் குடிமக்கள் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் முழுநேர மொழியியல் மற்றும் மனிதநேயப் பட்டப்படிப்புகளுக்கான உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முறி பத்திர கடப்பாடு இல்லை. இந்த ‘லிம் கிம் சான்’ நினைவு கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 30.
விண்ணப்பத்தை இணையம் வழி சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் மாதம் விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படும்.
எஸ்பிஎச் அறநிறுவனம் நிதி ஆதரவு வழங்கும் இந்த உபகாரச் சம்பளம் 2006ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் முதல் நிதி அமைச்சரான, காலஞ்சென்ற லிம் கிம் சான் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்ட இந்த கல்வி உபகாரச் சம்பளம் மூலம் இதுவரை 171 மாணவர்கள் பலன் அடைந்து உள்ளனர்.
படிப்புச் செலவுகளையும் தேர்வுக் கட்டணங்களையும் முழுமையாகச் செலுத்த இந்த உபகாரச் சம்பளம் உதவும். உபகாரச் சம்பளத்தில் வாழ்வாதார செலவுக்காக ஆண்டுக்கு 2,000 வெள்ளியும் புத்தகச் செலவுக்காக 300 வெள்ளியும் அதில் அடங்கும்.
திரு லிம் 1988ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவராகச் சேவையாற்றினார்.

