எட்டுப் பள்ளிவாசல்களில் மூன்று நோன்புப் பெருநாள் தொழுகை அமர்வுகள்

சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளன்று காலையில் தொழுகை இடம்பெற ஏற்பாடு செய்யும் 68 பள்ளிவாசல்களில் மூன்றில் இரண்டில், ஒரு தொழுகை அமர்வுக்கு மேல் ஏற்பாடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) தெரிவித்தது.

அந்த 68 பள்ளிவாசல்களில் 19ல் ஒரு தொழுகை அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்; 41ல் இரண்டு தொழுகை அமர்வுகள் இடம்பெறும்; எட்டில் மூன்று அமர்வுகள் நடைபெறும்.

காலை 7.20 மணி, 8.45 மணி, 9.45 மணிக்குத் தொழுகை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாண்டின் நோன்புப் பெருநாள் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.

மேலும், தங்களின் வீடுகளுக்கு அருகே தொழுகையில் ஈடுபட விரும்பும் முஸ்லிம்களுக்கு உதவ 34 சமூகக் குழுக்கள் (குவார்யா) அமைத்துத் தரப்படும்.

மொத்தமாக 228,760 பேர் வரை தொழுகையில் ஈடுபட 68 பள்ளிவாசல்கள் வசதி செய்துதரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முயிஸ் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!