ஏப்ரல் முழுவதும் இடியுடன் மழை, வெப்பம்

சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்துக்கு அதிகமான அளவில் மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தீவின் சில பகுதிகளில் பெரும்பாலான நாள்களின் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) தெரிவித்தது. இந்தக் காலகட்டத்தில் உலகின் நிலநடுக்கோட்டுப் பகுதி மழைக்காலத்தை எதிர்நோக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது அதற்குக் காரணம்.

அதனால் சில நாள்கள் பல இடங்களில் கனமழை பொழியக்கூடும்.

எனினும், அநேகமாக வெப்பமும் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 25லிருந்து 34 டிகிரி செல்சியசுக்குள் இடைப்பட்டிருக்கும். சில நாள்கள் பிற்பகல் வேளையில் வெப்பநிலை 35 டிகிரியைத் தொடக்கூடும்.

இம்மாதம் ஆறாம் தேதியன்று ஜூரோங் வட்டாரத்தில் வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியசைத் தொட்டது. கடந்த இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் அதுவே ஆக அதிகமாகப் பதிவான வெப்பநிலையாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!