பெருங்கடல்கள், கடல் சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கான சிங்கப்பூர் தூதரான ரெனா லீ டைம் இதழின் தலைசிறந்த 100 செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
“அமைதியுடன் கூடிய கண்ணியம், உறுதி, பண்புடன் பூமியின் நீர்ப்பரப்பில் உயிரியல் பன்முகத்தன்மையை சட்டபூர்வமாக பாதுகாப்பது தொடர்பான விவாதங்களை லீ வெற்றிகரமாக வழிநடத்தினார்,” என்று டைம்ஸ் சஞ்சிகையில் ஏப்ரல் 17 வெளியீடு தெரிவித்தது.
பெருங்கடல்கள், கடல் சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கான சிங்கப்பூர் தூதர், வெளியுறவு அமைச்சின் சிறப்புத் தூதர் என்ற முறையில், திருமதி லீ ஆழ்கடல் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உதவினார். அது, தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளைப் பாதுகாக்க அனைத்துலக ஒத்துழைப்புக்கு அடித்தளமிட்ட வரலாற்று ஒப்பந்தமாகும்.
தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் பல்லுயிர்ப் பெருக்க ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இது 15 ஆண்டுகளுக்கும் மேலான ஒப்பந்தமாகும்.
திருவாட்டி லீ தலைமையில் நடைபெற்ற 40 மணிநேர பேச்சுவார்த்தை அமர்வுக்குப் பிறகு, மார்ச் 2023ல் ஐநா தலைமையகத்தில் 190க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டன.
“உலகின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மனித நடவடிக்கைகளை நிர்வகிக்கும் சட்டரீதியான கட்டமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதைக் கற்பனை செய்து பாருங்கள்.
“ரெனா லீ எதிர்கொண்ட சவால் அதுதான். கடல் பல்லுயிரினம் குறித்த ஐ. நா. அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் தலைவராக, ஐந்து ஆண்டுகளாக ஆழ்கடல் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்து கொந்தளிப்பான விவாதங்களின்போது ரெனா லீ பணியாற்றினார்,” என்று டைம் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 2023இல் ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், ஆழ்கடல் பகுதியில், பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளை நிறுவ வழிவகுக்கிறது
2023ன் அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்ற சீனப் பிரதமர் லி கியாங், ஈரானியப் பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான நர்ஜெஸ் மொகமதி ஆகியோர் டைம் சஞ்சிகையின் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வேறு சிலர்.