தாய்லாந்தில் செய்தியாளர்கள் இருவர் கைது

பேங்காக்: ஒராண்டுக்குமுன் தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் இருக்கும் கோவில் ஒன்றின் சுவரில் வண்ணத் தெளிப்பானைக் கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் ஆர்ப்பாட்டகாரர் ஒருவர் கிறுக்கினார்.

அது குறித்து எழுதிய இரண்டு செய்தியாளர்களைக் கைது செய்ததாக அந்நாட்டுக் காவல்துறையினர் பிப்ரவரி 13ஆம் தேதி தெரிவித்தனர்.

இணையச் செய்தி நிறுவனமான ‘பிரச்சதை’யின் நிருபர் நட்டாபோல் மெக்சோபோன், தன்னுரிமை செய்தி புகைப்படக் கலைஞர் நட்டாஃபோன் ஃபான்போங்சனன் ஆகிய இருவரும் பிப்ரவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

வரலாற்றுத் தளம் ஒன்றை சேதப்படுத்துவதற்கும் நாசவேலையில் ஈடுபடுவதற்கும் உடந்தையாக இருந்ததாக அவ்விரு செய்தியாளர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டதாக அவ்விருவரைப் பிரநிதிக்கும் மனித உரிமைகளுக்கான தாய்லாந்து வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

“அவ்விருவரும் அப்பகுதிக்குச் செய்தி சேகரிக்க மட்டுமே சென்றனர். அந்த ஆர்பாட்டகாரரின் செய்கை குறித்து அவர்கள் முன்கூட்டியே அறியவில்லை. அவர்கள் செய்தியாளர்களாக மட்டுமே அச்செய்தியை சேகரித்தனர்,” என ‘பிரச்சதை’ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் திவாரிட் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!