‘ஜனநாயகன்’ விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்

‘ஜனநாயகன்’ விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்

1 mins read
a6d244e3-f390-417a-a725-06d65800234f
‘ஜனநாயகன்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: இந்து தமிழ் திசை

மும்பை: தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை வாரியம் அதன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மும்பையில் உள்ள அவ்வாரியத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தணிக்கை வாரியம்தான் ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை இணையத்தில் கசியவிட்ட​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டு உண்மையில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மக்களைத் தவறாக வழிநடத்​தும் குற்​றச்​சாட்​டு என்றும் கூறப்பட்டுள்ளது.

“பொதுவாக, படத்தணிக்கைக்காக கேடிஎம் (Key Delivery Message) என்ற பாது​காப்பு முறையை வாரியம் பின்​பற்​றுகிறது.

“இந்த கேடிஎம் கடவுச்சொல் சம்பந்தப்பட்ட சினிமா திரைப்படத் தயாரிப்​பாளரிடம் மட்​டுமே இருக்​கும். கடவுச்சொல் இல்​லாமல் படத்தைப் பார்க்க முடி​யாது,” என்று தணிக்கை வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜனநாயகன்’ படத்​தின் டிசிபி (மின்னிலக்க சினிமா தொகுப்​பு) விண்​ணப்​ப​தா​ரரிடம் உரிய ஒப்​புதலுடன் மார்ச் 17ஆம் தேதி மும்​பை​யில் ஒப்​படைக்​கப்​பட்​டது என்றும் அப்​போது முதல் அந்த நகல் அவர்​களிடம்​தான் உள்​ளது என்றும் தணிக்கை வாரியத்தின் விளக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்