தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுகவுக்கு சவால் ஏதும் இல்லை: கனிமொழி

1 mins read
7ff07f5b-4afd-439b-999f-953d5392e2ee
கனிமொழி. - படம்: ஊடகம்

நெல்லை: தமிழக வெற்றிக் கழகத்தால் திமுகவுக்கு சவால் ஏதும் இல்லை என்று திமுக மகளிரணித் தலைவி கனிமொழி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

தவெக தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு எந்த வகையிலும் சவாலாக இருக்காது என்றும் அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் சவால் இருக்கும் என்றும் கனிமொழி கூறினார்.

“பல அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. தனித்துப் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட முடிவு. அவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால், வெற்றி திமுகவிற்குத்தான், திமுக கூட்டணிக்குத்தான்,” என்றார் கனிமொழி.

தமிழகம் எப்பொழுதும் ஒரே அணியில்தான் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வேறு யாரை கூட்டணியில் இணைப்பது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றார்.

“ஸ்டாலினை முதல்வராக ஏற்றுக்கொண்டு வரும் எந்த அரசியல் கட்சிகளும் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

“சில பேர் விஜய்யின் இந்த முடிவால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கலாம். யார் மக்களுடைய எதிரிகள் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர்,” என்று கனிமொழி தெரிவித்தார்.

தமிழக மக்கள் யாரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள், யாருக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பதுதான் முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், திமுக மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்