தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி

சட்டவிரோத வருவாயைப் பிரிப்பதற்கே கனிமவள அதிகாரிகளின் மாதாந்தரக் கூட்டம்

2 mins read
3dacd4d9-16bc-4c6b-b9f6-0539ee63518e
லஞ்சப் பணத்தைப் பிரித்துக் கொள்வதற்காக கனிமவளத் துறை அதிகாரிகள் மாதந்தோறும் கூட்டம் நடத்துவதாக மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சாடியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

மதுரை: கனிம வளத்துறை அதிகாரிகள் தங்களுக்கு சட்டவிரோதமாக வரும் வருவாயைப் பிரித்துக் கொள்வதற்காகவே மாதந்தோறும் கூட்டம் நடத்துவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி புகழேந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கனிம நிதி அறக்​கட்​டளை​யில் 2022ஆம் ஆண்​டில் உதவி இயக்குநராக இருந்த மாரி​யம்​மாள் என்​பவர் மீது, அவரின் உதவியாளர் தினேஷ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், “மாரியம்மாளிடம் உதவியாளராகப் பணிபுரியும்போது, குவாரி உரிமையாளர்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தும் லஞ்சப் பணத்தை வாரத்திற்கு ஒருமுறை எடுத்து வந்து மாரியம்மாளிடம் ஒப்படைத்து விடுவேன். அப்​போது போலி நடைச்​சீட்டு வழங்கியதாகப் புகார் எழுந்​தது. அதற்கு நான்​தான் காரணம் என மாரி​யம்​மாள் கூறி​னார்.

“அறுபதுக்​கும் மேற்​பட்ட குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்து மாரி​யம்​மாள் வங்​கிக் கணக்கு மூலம் லஞ்​சப்​பணம் வாங்கியதற்கான ஆதா​ரங்​கள் உள்​ளன. எனவே எனக்​கும், எனது தாயாருக்​கும் காவல்துறை பாது​காப்பு வழங்க உத்​தர​விட வேண்​டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.பு​கழேந்தி முன் விசா​ரணைக்கு வந்​தது. அரசு வழக்​கறிஞர் வாதிடும்​போது, “மனு​தா​ரர் உள்​நோக்​கத்​துடன் இந்த வழக்கை தாக்​கல் செய்து உள்​ளார். தனிப்​பட்ட முறையில் குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்​தும் மனு​தா​ரர் ஆதா​யம் அடைந்​துள்​ளார். எனவே மனுவைத் தள்​ளு​படி செய்யவேண்​டும்,” என்​றார்.

மனு​தா​ரரின் வழக்​கறிஞர் வாதிடும்​போது, “கனிமவள உதவி இயக்​குநர் மாரி​யம்​மாள், லஞ்ச வழக்​கு ஒன்றில் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்டார். பின்பு மூன்று மாதங்களில் மீண்​டும் அதே பணி​யிடத்​தில் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் பல்​வேறு குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்து லஞ்​சம் பெற்​றுள்ளார். அதற்கான ஆதா​ரங்​கள் உள்​ளன.

இப்போது, அவர் தேனி மாவட்​டத்​தில் பணி​யில் இருப்​ப​தால் இந்த மாவட்​டத்​தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்​புள்ள கனிமவளங்​கள் கேரளா​வுக்கு கடத்​தப்​படு​கின்​றன,” என்றார்.

இதையடுத்து நீதிப​தி, “கனிம வள அதி​காரி​கள் கூட்​டம் நடத்​து​வ​தே, ஒவ்​வொரு மாத​மும் எவ்​வளவு வரு​மானம் வரு​கிறது? அதை எப்​படிப் பிரித்​துக் கொள்​வது என்​ப​தற்​காகத்​தான்.

“அதி​காரி​களும், குவாரி உரிமை​யாளர்​களும் அரசின் வரு​வாயைப் பங்கு போட்​டுக் கொள்​கின்​றனர். தமிழகம் முழு​வதும் இதே நிலை​தான் நீடிக்​கிறது. மனு​தாரர் வங்​கிக் கணக்​கில் குவாரி உரிமை​யாளர்​கள் எதற்​காக பணம் செலுத்​தினர்? இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்​தனர்? என்று அம்​பாத்​துறை காவல் ஆய்​வாளர் விரிவாக​வும், நேர்​மை​யாக​வும் விசா​ரணை நடத்தி நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்.

“தவறும்​பட்​சத்​தில் இந்த விவ​காரம் சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​படும்,” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்