கொரோனா கிருமித்தொற்று: புதிதாக 35 பேர் சேர்ந்தனர், 16 பேர் தேறினர்

சிங்கப்பூரில் கொரோனா கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 879ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேர் உட்பட புதிதாக 35 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று சுகாதார அமைச்சு இன்று (மார்ச் 30) தெரிவித்தது.

கிருமிப் பரவும் இடங்களாக மூன்று புதிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எண் 2 சிலேத்தார் நார்த் லிங்கில் உள்ள எஸ்11 டார்மிட்டரி@பொங்கோல், எண் 25 வில்பி ரோட்டில் உள்ள வில்பி ரெசிடன்சஸ், எண் 69 செர்க்யுளர் ரோட்டில் உள்ள ஹீரோஸ் இரவு விடுதி ஆகியவை அந்த மூன்று இடங்கள்.

உள்ளூரில் கிருமி தொற்றியோரில் இந்திய ஆடவர்கள் மூவர் அடங்குவர். உள்ளூரில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 26 பேரில் 12 பேர், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். 14 பேருக்கு எதனுடனும் தற்போது தொடர்பில்லை.

கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு 16 பேர் இன்று வீடு திரும்பினர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 228 பேர் குணமடைந்துள்ளனர். கிருமித்தொற்று பாதிப்பால் இதுவரை மூவர் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனையில் உள்ள 420 பேரில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தற்போது நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 228 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!