கொவிட்-19: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் 5வது நபர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 3) காலை அறிவித்தது.

இன்று உயிரிழந்த 86 வயதான சிங்கப்பூர் பெண்மணி, கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 918வது நபரான அவர் லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் ஹோம் கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

மார்ச் 31ஆம் தேதி தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதே நாளில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 1.55 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தாருக்கு தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் உதவி வருகிறது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று கடந்த ஜனவரி 23ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதிலிருந்து நிகழ்ந்த ஐந்தாவது மரணம் இது.

மார்ச் 21ஆம் தேதி 75 வயது சிங்கப்பூர் பெண்மணியும் 64 வயது இந்தோனீசிய ஆடவரும் உயிரிழந்தனர். அந்த மாதுக்கு நாட்பட்ட இதயநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ர பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆடவருக்கு இதயநோய் இருந்ததாகவும் கூறப்பட்டது.

மார்ச் 29ஆம் தேதி 70 வயது சிங்கப்பூரரான திரு சுங் ஆ லே கொவிட்-19ஆல் உயிரிழந்தார். அவருக்கு உயர் ரத்தக் கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருந்தன.

நேற்று உயிரிழந்த நான்காவது நபரான 68 வயது இந்தோனீசிய ஆடவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தன.

#சிங்கப்பூர் #கொவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!