சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 7) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 106 பேரையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,481 ஆகியுள்ளது.
இன்று பதிவான சம்பவங்களில் மூன்று மட்டுமே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு ஏற்பட்டது.
உள்ளூரில் ஏற்பட்ட 103 கிருமித்தொற்று சம்பவங்களில் 52 சம்பவங்கள் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட குழுமங்களுடன் தொடர்புடையவை; அவற்றில் 39 வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதிகளின் குழுமங்களை உள்ளடக்கியவை.
பொங்கோல் S11 தங்கும் விடுதியுடன் தொடர்புடைய மேலும் 10 சம்பவங்கள் இன்று பதிவாகின. இதனையும் சேர்த்து மொத்தம் 98 பேருக்கு அங்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும்விடுதியில் புதிதாக 9 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையும் சேர்த்து அங்கு 52 பேருக்கு கிருமித்தொற்று உள்ளது.
சுங்கை தெங்கா லாட்ஜில் பதிவான 12 புதிய சம்பவங்களையும் சேர்த்து அங்கு 18 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெம்பனிஸ் தங்கும் விடுதியில் புதிதாகப் பதிவான 8 சம்பவங்களையும் சேர்த்து அங்கு மொத்தம் 17 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கோச்ரேன் லாட்ஜில் இன்று உறுதி செய்யப்பட்ட 3 சம்பவங்களையும் சேர்த்து அங்கு மொத்தம் 12 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
50 மார்க்கெட் ஸ்திரீட்டில் உள்ள புரோஜெக்ட் குளோரி கட்டுமானத் தளத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று குழுமத்தில் இன்று புதிதாக 3 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதையும் சேர்த்து அங்கு மொத்தம் 21 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
7 புதிய கிருமித்தொற்று சம்பவங்களையும் சேர்த்து முஸ்தஃபா கிருமித்தொற்று குழுமத்தில் மொத்தம் 45 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் ஹோம் கிருமித்தொற்று குழுமத்தில் இன்று பதிவான 3 சம்பவங்களையும் சேர்த்து மொத்தம் 16 பேருக்கு அங்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
10 வேறு கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையவை.
எஞ்சியுள்ள 41 உள்ளூர் சம்பவங்களில், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
இதுவரை மொத்தம் 377 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சைபெற்று வரும் 627 பேரில் 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 471 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
#சிங்கப்பூர் #கொவிட்-19