நான்காவது வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதி தனிமைப் படுத்தப்பட்டது

வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும்விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று குழுமங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே நான்காவது வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதி தனிமைப்படுத்தப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் சுங்கை தெங்கா லாட்ஜ், தனிமைப்படுத்தப்படும் வளாகமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்தது.

இந்த வளாகத்தில் 506 மற்றும் 512 ஓல்ட் சுவா சூ காங் ரோடு எனும் முகவரியைக் கொண்ட பகுதிகள் அடங்கும்.

இன்று மாலை நிலவரப்படி இந்த தங்கும்விடுதியில் 29 கொரோனா கிருமித்தொற்று சம் பவங்கள் உறுதியாகியுள்ளன.

இதற்கு முன் பொங்கோலில் உள்ள ‘S11 தங்கும்விடுதி’, டோ குவானில் இருக்கும் ‘வெஸ்ட்லைட் தங்கும்விடுதி’, ‘டோ குவான் தங்கும்விடுதி’ ஆகிய மூன்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

தற்போது நாட்டின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக ‘S11 தங்கும்விடுதி’ உள்ளது.

இங்கு 118 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. டோ குவானில் இருக்கும் இரு தங்கும்விடுதிகளிலும் 38 மற்றும் 23 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர மேலும் ஒன்பது தங்கும்விடுதிகளில் கிருமித்தொற்று குழுமங்கள் உறுதியாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!