(காணொளி) 'ஊழியர்களை வேலையில் வைத்துக் கொள்ளுங்கள்'

அரசாங்கம் உதவி நடவடிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், ஊதியத்தைக் குறைக்க வேண்டாம் என்றும் ஊழியர்களைப் பணியிலேயே வைத்துக்கொள்ளுமாறும் ஊழியரணி தலைவர் இங் சீ மெங் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊழியர்களுக்காக நேற்று (ஏப்ரல் 11) காணொளி ஒன்றை வெளியிட்ட என்டியுசி பொதுச் செயலாளருமான அவர், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல ஊழியர்களின் கவலைகள் பற்றித் தெரிந்திருப்பதாகக் கூறிய அவர், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் நியாயமான முறையில் நடந்துகொள்ளும்படி கூறியுள்ளார்.

“கொவிட் 19 கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளால் பலரும் வேலை உத்தரவாதம் பற்றி கவலைகொண்டிருப்பதை நான் அறிவேன். உங்களில் சிலர் வேலை இழப்பதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்; சம்பளக் குறைப்பு ஏற்படுமோ என்று சிலர் கவலைப்படுகிறீர்கள். ஒருவேளை அப்படி நேர்ந்தால் குடும்பத்தாருக்கு உணவளிப்பது, உள்ளிட்ட குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது பற்றியும் கவலைகொண்டிருக்கிறீர்கள்,” என்றும் அவர் கூறினார்.

“ஊழியரணி தலைவராக, நீங்கள் கவலைப்படும் அம்சங்களைப் பற்றி நானும் அக்கறை கொண்டிருக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி தெரியாது என்று கூறிய அவர், வரவுசெலவுத் திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஆதரவு நடவடிக்கைகள் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க உதவி வழங்கும் என்றார்.

உள்ளூர் ஊழியர்களுக்கு வழங்கும் முதல் $4,600 ஊதியத்தில் 75% வழங்கப்படும் வேலை ஆதரவுத் திட்ட மானியம் உதவும் என்று திரு இங் குறிப்பிட்டார்.

“உங்களை வேலையில் வைத்திருப்பதற்கு உங்கள் நிறுவனம் நிதியுதவி பெறுகிறது. உங்களைப் பயிற்சிக்கு அனுப்புவதற்கு விடுமுறை சம்பள நிதியை உங்களது நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் அவர்.

“மனிதவளச் செலவுகளில் ஓரளவுக்கு அவர்கள் இதிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் பயிற்சிக்குச் சென்றால் உங்களுக்கு வழங்கும் அடிப்படை மணிக்கணக்கு சம்பளத்தில் 80 விழுக்காட்டையவது உங்களது நிறுவனங்கள் திரும்பப் பெறலாம்,”

“இத்தகைய அரசாங்க உதவிகளுடன் உங்கள்து நிறுவனங்கள் உங்களுக்கு நியாயமான முறையில் நடந்துகொள்வர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டால் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைகள் ஆதரவுத் திட்டம், அடுத்த இரண்டு துணை வரவுசெலவுத் திட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது.

பணியிலிருக்கும் சுமார் 1.9 மில்லியன் சிங்கப்பூரர், நிரந்தரவாசிகள் ஆகியோருக்கு இந்த மாதம் வழங்கப்படும் ஊதியத்துக்கு சம்பள உதவித்தொகை ஆதரவு வழங்கும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மூன்று வரவுசெலவுத் திட்டங்களிலும் சுமார் $60 பில்லியன் தொகை கொவிட்-19 நெருக்கடியின் தாக்கத்தைச் சமாளிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படும் ஊழியர்கள் என்டியுசியுடன் தொடர்புகொள்ளலாம் என திரு இங் குறிப்பிட்டார்.

“ஒரே நாடாக ஒற்றுமையை வெளிப்படுத்தி, ஒரே மக்களாக மீள்திறனை வெளிக்காட்டி, முக்கியமாக வீட்டிலேயே இருப்பதன் மூலம் ஒருமைப்பாட்டுடன் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக பாதுகாப்பாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!