ஊழியர் விடுதியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் வசிக்கும் சுமார் 200,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நேற்று இறைச்சி, கோழி எனச் சிறப்பு விருந்து இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பல இடங்களில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் பலகாரங்களும் தேடி வந்தன.

கொண்டாட்ட உணர்வை வெளிநாட்டு ஊழியர்களிடையே பரப்பும் நோக்கில் வீட்டில் தாங்கள் தயாரித்த பலகார வகைகளை, 15 வர்த்தகர்கள் கொடுக்க முன்வந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் பணிக்குழு, முயிஸ் மற்றும் சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழில் சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வேறு நாட்டில் இருப்பதால் தாங்கள் மறக்கப்பட்ட உணர்வை ஊழியர்கள் பெறாத வண்ணம் இத்திட்டம் உள்ளது என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.

உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக சில ஊழியர்கள் தங்களின் பாரம்பரிய உடைகளில் வந்திருந்தனர். ஆனால் முகக்கவசத்தை அணிய மறக்கவில்லை. அறைகளிலேயே இறை வழிபாடு செய்தனர். இணையத்தில் முஃப்தியின் நோன்புப் பெருநாள் சொற்பொழிவைப் பார்த்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!