சிங்கப்பூரில் இன்று (ஜூன் 16) நண்பகல் நிலவரப்படி புதிதாக 151 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,969 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 2 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் இருவரும் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.
கிருமித்தொற்று கண்ட, செயின்ட் ஆன்டனி’ஸ் கனோசியன் உயர்நிலைப் பள்ளி மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 12 பள்ளி ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்த 47 மாணவர்களும் நலமாக இருப்பதாக நேற்று முன்தினம் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 214 பேரில் மூவர் மட்டுமே உள்ளூர் சமூகத்தில் வசிப்பவர்கள். அவர்கள் அனைவரும் வேலை அனுமதிச் சீட்டு கொண்டவர்கள்.
அத்தியாவசிய சேவைகளில் இருப்போருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் செய்துவரும் பரிசோதனைகளில் 28, 42, 48 வயதுகளில் இருக்கும் அவர்களுக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு அறிகுறி ஏதும் தென்படவில்லை. அவர்களில் இருவருக்கு தொடர்பு உள்ள நிலையில், மூன்றாமவருக்கு ஏற்கெனவே கண்டறியப்பட்ட குழுமங்களுடன் தொடர்பு இல்லை.
உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 8ஆக குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 9ஆக இருந்தது.
அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஆகியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.
இவரையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 26 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் வேறு காரணங்களால் 10 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் இதுவரை சுமார் 8.11 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 439,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online