வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வு நாட்களில் விடுதிகளிலேயே இருக்க வேண்டும்: மனிதவள அமைச்சு

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை (ஜூன் 19) முதல் நடப்புக்கு வரவுள்ள நிலையில், ஓய்வு நாட்களில் வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளிலேயே இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய கொவிட்-19 அலை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலையிடங்கள் தவிர, ஊழியர்கள் வேறு இடங்களுக்குச் சென்றால் அது சமூகத்தில் கிருமிப் பரவலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அது தெரிவித்தது.

விடுதிகளிலும் சமூகத்திலும் கிருமித்தொற்று எண்ணிக்கை நீண்ட காலத்துக்கு குறைவாக இருந்தால், கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதிகளில் வசிப்போர் மனமகிழ் நிலையங்கள் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சு தெரிவித்தது.

ஆனால், விடுதிகளில் இருக்கும் சமூக வசதிகளை ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தங்களது ஊழியர்களுக்கு விடுதிகளில் உணவு மற்றும் அன்றாட தேவைகள் வழங்கப்படுவதையும் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.

இருப்பினும் வேலையிடங்களிலிருந்து கிருமித்தொற்றை விடுதிகளுக்கு கொண்டுவரும் வாய்ப்பு இருப்பதையும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட வளாகங்களில் சுமார் 75,000 ஊழியர்கள் தற்போது வசித்து வருகின்றனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!