சிங்கப்பூர் - ஹாங்காங் இடையில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டு இருந்த சிறப்புப் பயணத் திட்டம் 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.
மீண்டும் எப்போது இந்தப் பயணம் தொடங்கும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் நேற்று பிற்பகலில் தமது ஃபேஸ்புக் வாயிலாகக் கூறினார்.
தாமும் ஹாங்காங் (வணிக, பொருளியல் மேம்பாட்டு) செயலாளர் எட்வர்ட் யாவும் தற்போதைய ஹாங்காங் நிலவரம் குறித்தும் சிறப்புப் பயண ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்த பின்னர் பயணத் திட்ட தொடக்கத்தை தள்ளிவைக்க முடிவு செய்ததாக திரு ஓங் விளக்கி உள்ளார்.
“இரு வாரங்களுக்கு நிலைமையை ஆராய்ந்த பின்னர் புதிதாக பயணம் தொடங்கப்படும் தேதி குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். ஏற்கெனவே பயணத்திற்குத் திட்டமிட்டு இருந்தோரின் ஏமாற்றத்தையும் விரக்தி யையும் என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.
“இருப்பினும் பொதுமக்களின் சுகாதாரத்தைக் கவனத்தில் கொண்டு பயணத்தைத் தள்ளி வைப்பதே சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம்.
“கொவிட்-19 கிருமி இன்னும் நம்மிடையே உள்ளது என்பதை இச்சம்பவம் தெளிவாக நினைவூட்டுகிறது. நாம் நமது வழக்கநிலையை மீட்டெடுக்கக் கடுமையாக போராடினாலும் இதற்கான பயணம் அவ்வளவு சுலபமான தாக இருக்காது. இருப்பினும் பயணத்தை பத்திரமாகத் தொடங்கும் நாளை எதிர்நோக்குவோம்,” என்று திரு ஓங் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறப்புப் பயணம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) தொடங்கும் என்றும் இருப்பினும் அதனை நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் நேற்றுக் காலையில் அவர் கூறியிருந்தார்.
புதிதாக 43 பேருக்கு தொற்று
இதற்கிடையே, ஹாங்காங்கில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 36 பேர் உள்ளூர்வாசிகள் மற்றும் 13 பேர் நோயாளிகளோடு தொடர்பில் இல்லாதவர்கள். வெள்ளிக்கிழமை 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
புதிய சம்பவங்களையும் சேர்த்து ஹாங்காங்கில் நேற்று வரை 5,560 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று கார ணமாக இதுவரை 108 பேர் மாண்டுவிட்டனர்.
முன்னதாக, சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் கட்டுப்பாடுகளுடனான சிறப்புப் பயணம் திட்டமிட்டபடி தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதன் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
“ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வருவோர் சாங்கி விமான நிலையத்தில் பிசிஆர் எனப்படும் பல்
படிய தொடர்வினை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் அது குறிப்பிட்டு இருந்தது.
“புதிய கிருமிப் பரவல் குழுமங்கள் கண்டறியப்பட்டு உள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு ஹாங்காங்கில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர், ஹாங்காங் சுகாதாரத் துறை அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறார்கள்,” என்றது ஆணையம்.
இருதரப்பு சிறப்புப் பயண ஏற்பாட்டின்படி ஏழு நாட்கள் கணக்கெடுப்பில் தொடர்புப்படுத்தப்படாத கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை சராசரியாக நாள் ஒன்றுக்கு ஐந்துக்கு மேல் கூடினால் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும். ஹாங்காங்கில் இப்போதுள்ள நிலவரப்படி சராசரியாக 2.14 சம்பவங்கள் உள்ளதென ஆணையம் விளக்கி இருந்தது.
அதேநேரம் தமது நாட்டின் கிருமித்தொற்று சம்பவங்கள் அபாயகட்டத்தை எட்டி இருப்பதாக ஹாங்காங் உணவு மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் சோஃபியா சான் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
இதற்கிடையே, இருநாட்டு விமானங்கள் மீண்டும் எப்போது பயணத்தைத் தொடங்கும் என்பது குறித்து டிசம்பர் தொடக்கத்தில் இரு அரசாங்கங்களும் அறிவிக் கும் என்று ஹாங்காங் வணிக, பொருளியல் மேம்பாட்டு செய லாளர் எட்வர்ட் யாவ் நேற்று பிற் பகலில் ஊடகங்களிடம் கூறினார்.
சிங்கப்பூர்-ஹாங்காங் இடை யிலான சிறப்புப் பயண ஏற்பாடு கள் குறித்து அக்டோபர் நடுப் பகுதியில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஹாங்காங்கில் தொற்றுச் சம்பவங்கள் திடீர் என்று வேகமெடுத்து வருகின்றன.