பிரதமர் லீ: இந்தியாவுக்கு எப்போதும் கதவு திறந்திருக்கும்

பிரதமர் லீ: இந்தியாவுக்கு எப்போதும் கதவு திறந்திருக்கும்

2 mins read
e63eb4d3-fff5-42fa-9535-3d9300f1046a
வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகினாலும் எதிர்காலத்தில் இம்முடிவை அது பரிசீலிக்கும் என்று நேற்றைய புத்தக வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தார் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்தியாவின் மகத்­தான ஆற்­ற­லில் தொடக்­கக் காலத்­தி­லேயே சிங்­கப்­பூர் நம்­பிக்கை கொண்­ட­தாக பிர­த­மர் லீ சியன் லூங் நேற்­றைய நிகழ்­வில் தெரி­வித்­தார்.

இதே போன்று இந்­தி­யா­வில் இதற்கு முன்பே நம்­பிக்கை கொண்­டி­ருந்த திரு கோ சோக் டோங், இந்­தி­யா­வில் முத­லீடு செய்­ய­வும் அத­னு­டன் வர்த்­த­கத்­தில் ஈடு­ப­ட­வும் வேண்­டும் என்று சிங்­கப்­பூருக்கு அறி­வு­றுத்தி இருந்­தார் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

அதைத் தொடர்ந்து பொரு­ளி­யல் உற­வு­கள் வலு­வ­டைந்­தன. 1995ஆம் ஆண்­டில் தொடங்கி 2000ஆம் ஆண்­டு­வரை இந்­தி­யா­வில் சிங்­கப்­பூர் செய்­தி­ருந்த முத­லீ­டு­கள் ஐந்து மடங்­கா­கி­யதை பிர­த­மர் சுட்­டி­னார்.

பின்­னர், வட்­டார நிலை­யி­லான விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம் கையெழுத்தானது. இந்­தியா-சிங்­கப்­பூர் இடை­யி­லான தூத­ரக உற­வு­க­ளின் 50வது ஆண்டு நிறை­வைச் சிறப்­பிக்­கும் நோக்­கில் 2015ஆம் ஆண்­டில் உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­து­வம் ஒன்று ஏற்படுத்தப்­பட்­டது.

தற்­காப்பு, நிதி, கலா­சா­ரம் உள்­ளிட்ட பல அம்­சங்­களில் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே நில­வும் ஆழ­மான ஒத்­து­ழைப்­பைப் பிர­தி­ப­லிப்­ப­தாக இது அமைந்­தது.

தற்­போது உலக அரங்­கில் இந்­தியா முக்கிய சக்­தி­யாக மாறி­விட்­டது என்று தெரி­வித்த திரு லீ, உல­க­நா­டு­க­ளின் மீது குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை இந்­தியா ஏற்­படுத்தி வரு­வ­தா­கச் சொன்­னார்.

"இந்­தியா இல்­லா­மல், அதன் ஆக்­க­பூர்­வத்தன்மை இல்­லா­மல், பரு­வ­நிலை மாற்­றம், உலக வர்த்­தக நிறு­வ­னத்­தின் சீர்­தி­ருத்­தம், இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் பாது­காப்பு போன்ற பெரு­ம­ளவு உத்­தி­பூர்வ விவ­கா­ரங்­கள் தொடர்­பான விவா­தங்­கள் முழுமை அடை­யாது," என்­றார் திரு லீ.

சிங்­கப்­பூர்-இந்­தியா உற­வு­களைப் பற்றி கூறும் 'இந்­தியா அன் அவர் மைண்ட்ஸ்' என்ற புத்­த­கத்தை என்யுஎஸ் கலாசார மையத்தில் வெளி­யிட்­ட­போது பிர­த­மர் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார்.

380 பக்­கங்­கள் கொண்ட இப்­புத்­த­கம், 50 கட்­டு­ரை­களைக் கொண்டுள்ளது. மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம், டிபி­எஸ் தலைமை நிர்­வாகி பியுஷ் குப்தா போன்­ற­வர்­கள் எழு­திய கட்­டு­ரை­கள் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

கொவிட்-19 பல நாடு­களை வாட்டி, அத­னால் பொரு­ளி­யல் ஆட்­டங்­கண்டு இருந்­தா­லும் இந்­தி­யா­வின் நீண்­ட­கால எதிர்­கா­லம் பிர­கா­ச­மா­ன­தாக, நம்­பிக்கை அளிப்­ப­தாக உள்­ள­தென திரு லீ தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், ஆசி­யான்-இந்­தியா உரை­யா­டல் உற­வு­களை அடுத்த ஆண்டு ஒருங்­கி­ணைக்­கும் பொறுப்பை சிங்­கப்­பூர் ஏற்க உள்ளது.

இந்நிலையில் இரு­த­ரப்­புக்­கும் இடை­யி­லான உறவை ஆழ­மாக்­கு­வ­தில் ஆர்­வம் கொண்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அதில் ஒன்று, எதிர்­கா­லத்­தில் வட்­டார நிலை­யி­லான விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வத்­தில் இணை­வ­தன் பலன்­களை மறு­பரி­சீ­லனை செய்­வதே என்­றார். சென்ற மாதம் இப்­பங்­கா­ளித்­துவ ஒப்­பந்­தத்­தில் 15 நாடு­கள் கையெழுத்­திட்­டன.

"இந்த ஒப்­பந்­தம் முடி­வா­கும்­வரை அனைத்து நாடு­க­ளின் மன­தி­லும் இந்­தியா இருந்தது. இந்­தியா­வுக்­கு எப்போதும்s கதவு திறந்­தி­ருக்­கும்," என்­றார் திரு லீ.

இந்­தியா என்­றுமே சிங்­கப்­பூருக்கு மதிக்­கத்­தக்க ஒரு நண்­பனாக­வும் பங்­கா­ளி­யா­க­வும் இருக்­கும் என்­ப­தைச் சரி­யான நேரத்­தில் நினை­வு­றுத்த புதிய புத்­த­கம் உத­வும் என்­றார் அவர்.

புத்­த­கத்­தில் இந்­தி­யா­வின் ஆற்­றல், அதன் பொரு­ளி­யல், அர­சி­யல் தன்மை, சிங்­கப்­பூ­ரு­ட­னான அதன் கால­னித்­து­வத்­துக்கு முந்­தைய உற­வு­கள், இந்­தி­யர்­க­ளைப் பற்றி சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கண்­ணோட்­டம் போன்ற பல­த­ரப்­பட்ட தலைப்­பு­களில் கட்­டு­ரை­கள் அமைந்­துள்­ளன.

குறிப்புச் சொற்கள்