முரசொலி: கொவிட்-19க்கு தடுப்பூசி; காக்கும் கவசத்துடன் அடுத்த கட்ட போர்

முரசொலி: கொவிட்-19க்கு தடுப்பூசி; காக்கும் கவசத்துடன் அடுத்த கட்ட போர்

4 mins read
d133afa1-f05d-4764-88d8-b200b0965991
படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் அடைந்­தது முதல் கொவிட்-19 போன்ற ஒரு நிலை­யைச் சந்­தித்­ததே கிடை­யாது.

அந்­தக் கிருமி கடந்த ஓராண்­டில் படுத்­திய பாடும் அது ஏற்­ப­டுத்­திய பாதிப்­பு­களும் பல காலம் நீடிக்­கும் அள­வுக்கு இருக்­கிறது. கிருமி ஒழிந்­தா­லும் அது பொரு­ளி­ய­லுக்­கும் மக்­க­ளுக்­கும் மன ரீதி­யி­லும் இதர வகை­யி­லும் ஏற்­ப­டுத்­திய பாத­கங்­கள் பல காலம் தொட­ருமெனக் கணிக்­கப்­ப­டு­கிறது.

இருந்­தா­லும் அர­சாங்­க­மும் மக்­களும் புரிந்­து­ணர்­வு­டன் அணுக்­க­மாகச் சேர்ந்து ஒத்­து­ழைத்­த­தன் விளை­வாக சிங்­கப்­பூர் கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுத்து நிறுத்தி அதைக் கட்­டுப்­ப­டுத்தி தனது மீள்­தி­றன் கெடா­மல் மேம்­பட்டு வரு­கிறது என்­பது ஒரு பெரும் சாத­னையாகவே பார்க்கப்படுகிறது.

இப்­ப­டிப்­பட்ட ஒரு சாதனை நிலை­யில், மேலும் ஒரு சோதனையாக, பயமுறுத்­தும் வித­மாக புதிய வடி­வில் கொவிட்-19 கிருமி தலைதூக்குவதாக உல­கம் எங்­கும் அபா­யச் சங்கு ஊதப்­பட்டு இருப்­ப­தால் கிரு­மித்­தொற்­றை­விட அதிக வேக­மாக உல­கம் எங்­கும் மறுபடியும் அச்­சம் பர­வு­கிறது.

லண்­ட­னில் இருந்து அண்­மை­யில் சிங்­கப்­பூருக்கு வந்த 17 வயது மாண­விக்­குப் புதிய வகை கிரு­மித்­தொற்று இருக்­கிறது என்­பதை சிங்­கப்­பூர் சில நாட்­க­ளுக்கு முன் உறு­திப்­ப­டுத்­தி­யது.

இப்­படி அச்­சம் கூடி­வரும் சூழ­லில், கிருமித் தொற்றுக்கு எதி­ரான அடுத்த கட்ட போராட்­டத்­தில் நமக்கு உறுதுணை­யாக, கவ­ச­மாக இருந்து உத­வும் என்று நம்­பப்­படும் தடுப்­பூசி இங்கு வந்து தரை இறங்கி இருப்­பது கொஞ்­சம் நிம்­மதிப் பெரு­மூச்­சு­விட வைத்து இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வின் ஃபைசர் நிறு­வ­ன­மும் ஜெர்­மனி­யின் பயோ­என்­டெக் நிறு­வ­ன­மும் சேர்ந்து விநி­யோ­கிக்­கும் ஃபைசர்-பயோ­என்­டெக் என்ற தடுப்­பூ­சியை ஏற்­றிக்கொண்டு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னம் திங்­கட்­கி­ழமை சாங்­கி­யில் தரை இறங்­கி­யது. ஆசி­யா­வில் முதன் முத­லாக சிங்­கப்­பூ­ருக்­குத்தான் மருந்து வந்­துள்­ளது. இது இரட்­டிப்பு மகிழ்ச்­சியைத் தரு­வ­தா­க­வும் பார்க்­கப்­ப­டு­கிறது.

மருந்து நமக்­குக் கிடைத்­துள்ள அதே நேரத்­தில், இந்த வட்­டா­ரத்­தின் இதர பகு­தி­க­ளுக்­கும் மருந்து சென்று சேர்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்து மைய­மாக சிங்­கப்­பூர் திகழ்­வது நமக்கு மட்­டுமன்றி வட்­டார நாடுகளுக்­கும் வர­வேற்­கத்­தக்க நல்ல செய்தி­யாக இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வி­லும் பிரிட்­ட­னி­லும் சில ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் தடுப்­பூசி இயக்­கம் பிரம்­மாண்­ட­மான அள­வில் தொடங்கி இருக்­கிறது. அந்த ஊசி கொவிட்-19 போரில் எந்த அள­வுக்குக் கைகொடுக்­கும் என்­பது போகப்­போ­கத்­தான் தெரி­யும் என்­றா­லும் இப்­போ­தைக்கு தடுப்­பூ­சி­யை­விட்­டால் வேறு வழி­யில்லை என்­ப­து­தான் உண்மை நில­வ­ரம்.

கொவிட்-19க்கு எதி­ரான உல­க­ளா­விய தடுப்­பூசி இயக்­கம் என்­பது இன்றோ நாளையோ முடிந்­து­விடக் கூடிய ஒன்று அல்ல. உல­கின் மூலை­முடுக்கு­களில் எங்­கும் உள்ள மக்­களை ஊசி சென்று அடை­வ­தற்கு குறைந்­த­பட்­சம் ஓரி­ரண்டு ஆண்­டு­கள் ஆகும் என்று கணக்­கி­டப்­ப­டு­கிறது.

கொவிட்-19 தடுப்பு ஊசி மருந்­தைப் பெறு­வது என்­பது அவ்­வ­ளவு சுல­ப­மா­ன­தாக இல்லை. பல நாடு­களும் தடுப்­பூ­சியை விரைவாகப் பெறு­வ­தற்கு இமா­லய முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

பெரிய நாடு­க­ளின் கடும் போட்­டி­க­ளுக்கு இடை­யில் சிங்­கப்­பூர் வெற்­றி­க­ர­மாக தடுப்பு ஊசி மருந்தைப் பெற்­றுள்­ளது. இதற்கு சிங்­கப்­பூர் அதி­கா­ரி­கள் கைக்­கொண்டு வரும் செயல்­சார்ந்த அணு­கு­மு­றையே கார­ணம். பல உத்­தி­க­ளைக் கையாண்டு சிங்­கப்­பூர் இதைச் சாதித்து இருக்­கிறது.

முத­லில், வல்­லு­நர்­கள் குழு, கிடைக்­கக்­கூ­டிய எல்லா தக­வல்­க­ளை­யும் அலசி ஆராய்ந்­தது. மிக­வும் ஆற்­றல்­மிக்க மருந்து எது என்­பதை அந்­தக் குழு பல­வற்­றை­யும் மதிப்­பிட்டு கண்டுபிடித்­தது.

அந்த வல்­லு­நர்­கள் குழு பரிந்­து­ரைத்த மருந்து நிறு­வ­னங்­களை மற்­றொரு குழு­வி­னர் அல­சி­னர். சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் பல மருந்து நிறு­வ­னங்­க­ளு­டன் தொடர்புகொண்­டது.

ஒரே ஒரு நிறு­வ­னத்தை மட்­டும் சார்ந்து இரா­மல் பார்த்­துக்­கொண்­டது. அதே நேரத்­தில் மிக­வும் ஆற்­றல்­மிக்க, பய­னுள்ள மருந்து கிடைத்­து­வி­டும் என்­ப­த­யும் சிங்­கப்­பூர் உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டது.

சிங்­கப்­பூர் அடுத்த உத்­தி­யாக $1 பில்­லி­ய­னுக்­கும் அதிக தொகையை ஒதுக்கி தனக்கு மருந்து கிடைப்­பதை உறுதி செய்­தது. இவை எல்­லா­வற்­றின் விளைவை எடுத்­துக்­காட்­டு­வ­தாகவே சிங்­க­பூ­ரில் மருந்து தரை இறங்­கி­ இருக்­கிறது.

சிங்­கப்­பூர் இது­வ­ரை­யில் ஃபைசர் மருந்­தை மட்­டும் பயன்­பாட்­டுக்கு அங்­கீ­கரித்­துள்­ளது. சினோ­வாக், மொடர்னா ஆகிய நிறு­வ­னங்­கள் தயா­ரிக்­கும் மருந்­துக்கு இனி­தான் அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட வேண்­டும். சிங்­கப்­பூ­ருக்கு முதல் கட்ட மருந்து வந்­துள்­ள நிலை­யில், கையில் இருக்­கும் மருந்தை மிக­வும் விவே­க­மாகப் பாதுகாத்து பயன்­ப­டுத்த வேண்­டும், விநி­யோ­கிக்க வேண்­டும் என்­பதே இதில் அடுத்த கட்­ட சவாலாகத் தெரிகிறது.

சிங்­கப்­பூர் மக்­களை எவ்­வ­ளவு விரை­வாக தடுப்­பூசி எட்­டும் என்­பது பல­வற்­றை­யும் பொறுத்­தது.

இதர மருந்­து­க­ளுக்குக் கிடைக்கும் அங்­கீ­காரம், அந்த மருந்துகள் இங்கு எப்­போது வரும் முத­லான பல­வற்­றை­யும் பொறுத்து தேசிய அள­வில் தடுப்பு மருந்து போடும் இயக்­கம் தொடங்­கும். அடுத்த ஆண்டு மூன்­றா­வது காலாண்டு வாக்­கில் அனை­வருக்­கும் தடுப்­பூசி என்­பது இலக்­காக உள்ளது. பல நிலவரங்களைப் பொறுத்து இது முன்­பின் ஆக வாய்ப்பு உண்டு.

இருந்­தா­லும் கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான அரணை எப்­படி ஏற்­ப­டுத்­து­வது, என்ன செய்­வது என்று தெரியாமல் இருந்துவந்த நிலை­யில், தடுப்­பூசி கைக்­குக் கிடைத்து இருப்­ப­தும் அடுத்த ஆண்­டில் அனை­வ­ருக்­கும் ஊசி என்ற இலக்­கும் பெரும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஆனால் கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் தடுப்­பூசி நமக்கு ஒரு கேட­ய­மாக, கவ­ச­மாக இருக்­க­லாமே தவிர அதுவே முழு வெற்­றியை ஈட்டித் தந்­து­வி­டும் என்று நம்­பு­வது விவே­க­மா­ன­தாக இருக்­காது. சிங்­கப்­பூ­ரர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளுக்­குள்ள பொறுப்பை உணர்ந்து கட்­டுப்­பாடு­க­ளைத் தொடர்ந்து கடைப்­பி­டித்து, சுத்­த­மான பழக்­க­வ­ழக்­கங்­களை வாழ்க்கை முறை­யாக ஆக்­கிக்கொண்­டால் இந்­தப் போரில் நமக்கு வெற்றி நிலைக்­கும் என்­பது திண்­ணம்.

குறிப்புச் சொற்கள்