மாதத்தில் இரண்டு நாள்கள் வீட்டிலிருந்து கற்கவேண்டும்; உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டாயம்

மாதத்தில் இரண்டு நாள்கள் வீட்டிலிருந்து கற்கவேண்டும்; உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டாயம்

2 mins read
eccd078d-95bb-41fa-9f58-df1380aa1317
நேற்று நடந்த வரு­டாந்­திர முதல்­வர்­கள் நிய­ம­ன, பாராட்டு விழா­வில் பங்கேற்ற கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் (படம்) இவற்றை அறிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அடுத்த ஆண்­டின் மூன்­றாம் பரு­வத்­தில் இருந்து மாதத்­திற்­குக் குறைந்­தது இரு நாள்­ க­ளுக்­குப் பள்ளி மாண­வர்­கள் வீட்­டில் இருந்­த­படி கல்வி கற்­பர். உயர்­நிலைப் பள்ளி, தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் அனைவரும் இப்புதிய மாற்­றத்­திற்கு உட்­ப­டுவர்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் இருந்­தா­லும் இல்­லா­வி­டி­னும் புதிய இயல்­பு­நி­லை­யின் ஒரு பகு­தி­யாக இந்­தப் புதிய நடை­முறை இடம்­பெ­றும். 2021 இறு­திக்­குள் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் தனி­ந­பர் கற்­றல் கருவி வழங்­கப்­படும்.

தொடக்­கப் பள்ளி மாண­வர்­களைப் பொறுத்­த­மட்­டில், கல்வி அமைச்சு கவ­ன­மான அணு­கு­முறை­யைக் கையா­ளும். சிறு வயது மாண­வர்­க­ளி­டம் கற்­றல் கரு­வி­கள் பயன்­பாடு எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை அறி­யும் நோக்­கில் முதற்­கட்­ட­மாக ஐந்து தொடக்­கப் பள்­ளி­களில் தனி­ந­பர் கற்­றல் கரு­வித் திட்­டம் சோதித்­துப் பார்க்­கப்­படும்.

நேற்று நடந்த வரு­டாந்­திர முதல்­வர்­கள் நிய­ம­ன, பாராட்டு விழா­வில் பங்கேற்ற கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் (படம்) இவற்றை அறிவித்தார்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்பில் இருந்­த­போது இடம்­பெற்ற முழு­நேர இல்­லம் சார்ந்த கற்­றல் முறை, சூழ­லுக்கு ஏற்ப தங்­களை மாற்­றிக்­கொண்டு, சுறு­சு­றுப்­பா­ன­வர்­க­ளா­க­வும் சுய­மாக இயங்­கு­பவர்­களாகவும் சுயமாகக் கற்­ப­வர்­களா­க­வும் மாண­வர்­களை மேம்­படுத்த வேண்­டிய தேவையை வலு­வாக்­கி­யது என்று அமைச்­சர் வோங் குறிப்பிட்டார்.

இத்­த­கைய மனப்­போக்­கு­களை விதைப்­ப­தில் இல்­லம் சார்ந்த கற்­றல் முறை­யின் பலன்­களை ஆசி­ரி­யர்­கள் கண்­ட­தா­க­வும் திரு வோங் சொன்னார்.

"அந்தப் பலன்­க­ளைத் தக்­க­வைப்­பது எப்­படி என்­ப­தும் புதிய நடை­மு­றை­களை வழக்­கப்­ப­டுத்­து­வது எப்­படி என்­ப­துமே இப்­போ­தைய கேள்வி," என்­றார் அவர்.

கைக்­க­ணினி அல்­லது மடிக்­கணினி வடி­வில் வரும் தனி­ந­பர் கற்­றல் கரு­வி­க­ளைப் பெற மாண­வர்­கள் தங்­க­ளது எடு­சேவ் கணக்­கு­களில் உள்ள பணத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் ஒரு­முறை மட்­டும் வழங்­கப்­பட்ட $200 எடு­சேவ் நிரப்­புத்­தொகை மற்­றும் வரு­டாந்­திர எடு­சேவ் பங்­க­ளிப்­பு­களால் தனி­ந­பர் கற்­றல் கரு­வி­களுக்­குச் செலுத்த பெரும்­பாலான மாண­வர்­க­ளின் எடு­சேவ் கணக்­கு­களில் போது­மான பணம் இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­களுக்­குக் கூடு­தல் மானி­யங்­கள் வழங்­கப்­படும் என்­ப­தால், தனி­ந­பர் கற்­றல் கரு­வி­களை வாங்க அவர்­கள் தங்­க­ளது கையில் இருந்து பணம் போட வேண்­டிய தேவை­ இ­ராது.

இல்­லம் சார்ந்த கற்­றல் நாள்­கள் கட்­டா­யம் என்­ப­து­டன், அவை புதிய பாடத்­திட்­டத்­தின் ஓர் அங்க­மும்கூட.

இருப்­பி­னும், பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக மாண­வர்­கள் அந்­நாள்­களில் பள்­ளிக்கு வர வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டால், அவர்­க­ளின் பள்­ளி­கள் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளி­டம் ஆலோ­சித்த பிறகு அனு­மதி வழங்­கப்­படும்.

தனி­ந­பர் கற்­றல் கரு­வி­களை மாண­வர்­கள் தவ­றா­கப் பயன்­படுத்­தக்­கூ­டும் என்­பது தொடர்­பான கவ­லை­க­ளுக்­கும் அமைச்­சர் வோங் பதி­லு­ரைத்­தார்.

அக்­க­ரு­விப் பயன்­பாட்­டைக் கட்­டுப்­ப­டுத்த ஆசி­ரி­யர்­க­ளுக்கு அனு­மதி அளிக்­க­வும் மாண­வர்­கள் அதை எவ்­வாறு பயன்­படுத்து­கின்­ற­னர் என்­ப­தைக் கண்­கா­ணிக்­க­வும் ஏது­வாக ஒவ்­வொரு கரு­வி­யி­லும் கருவி நிர்­வாக மென்­பொ­ருள் நிறு­வப்­படும்.

குறிப்புச் சொற்கள்