* 3 துறைகளை இலக்காகக் கொண்ட $11 பில்லியன் புதிய கொவிட்-19 மீட்சித் திட்டம்
* பெரும்பாலான துறைகளில் வேலை ஆதரவு திட்டம் $700 மில்லியன் செலவில் நீட்டிப்பு
* விமான போக்குவரத்து, நிலப் போக்குவரத்து, கலைகள் போன்ற துறைகளுக்கு ஆதரவு
* நிறுவனங்கள், ஊழியர்கள் வலுவாக மீண்டு வர அடுத்த 3 ஆண்டுகளில் $24 பில்லியன் ஒதுக்கப்படும்
* தொழில்களுக்கு ஆதரவாக அரசாங்கம் நிறுவன கூட்டுத்தொழில் உந்துதளம்; பகிரங்க புத்தாக்க தளம்; உலக புத்தாக்க கூட்டணி ஆகிய மூன்று ஏற்பாடுகளில் முதலிடு செய்யும்
* நிறுவனங்கள் தங்கள் புத்தாக்க கண்டுபிடிப்புகளை வர்த்தகப்படுத்த ஏதுவாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவு சொத்து உத்தி 2030 என்ற ஓர் ஏற்பாட்டை உருவாக்கும்
* ஆசியான் சந்தைகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்த புதிய துறைகளில் பொதுவான ஏற்பாடுகளை சிங்கப்பூர் மேம்படுத்தும். மின்னிலக்க இணைப்பு, இணையப் பாதுகாப்பு மேம்பட ஆசியான் நாடுகளுடன் தொடர்ந்து அணுக்கமாக செயல்படும்
* எஸ்ஜி யுனைட்டெட் வேலை, தேர்ச்சி திட்டத்தின் அடுத்த கட்டம் 200,000 உள்ளூர் மக்கள் வேலைகளில் சேர இந்த ஆண்டில் ஆதரவளிக்கும். கூடுதலாக $5.4 பில்லியன் ஒதுக்கப்படும்
* தொழில்நுட்பத் துறைகளில் தலைவர்களை உருவாக்க புதிய புத்தாக்க தொழில்முனைப்பு ஆய்வாளர் செயல்திட்டம்
* தாதியர், இதர சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் சம்பளம் உயரும்
* சம்பளப் பற்று திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்; ஆற்றல் மாற்றுச் செயல்திட்டம் 2024 செப்டம்பர் வரை நடப்பில் இருக்கும்
* வெளிநாட்டு ஊழியர்களுக்கான எஸ் பாஸ் வரம்பு 2023ல் 15% குறைக்கப்படும்
* குடும்பங்களுக்கு உதவ புதிய $900 மில்லியன் குடும்ப ஆதரவு திட்டம்
* குறைந்த வருவாய் ஊழியர்கள், குறைந்த வருவாய் குடும்பங்கள், சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு மேலும் நீண்ட கால ஆதரவு
* அறப்பணி அமைப்புகளுக்கு நிறுவனங்கள் ஆதரவளிக்க ஏதுவான திட்டங்கள் நீட்டிப்பு; புதிய $20 மில்லியன் மானியம்
இருப்பில் இருந்து எடுக்கப்பட்ட $52 பில்லியனில் $42.7 பில்லியன் தொகை 2020 நிதயாண்டில் செலவாகும் என்று அரசு எதிர்பார்க்கிறது. $9.3 பில்லியன் மிச்சம் இருக்கும்.
2020 நிதியாண்டில் ஒட்டுமொத்த பட்ஜெட் பற்றாக்குறை $64.9 பில்லியன் என்று அரசு எதிர்பார்க்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவே ஆக அதிகம். 2021 நிதியாண்டில் ஒட்டுமொத்த பட்ஜெட் பற்றாக்குறை $11 பில்லியனாக இருக்கும்
எம்ஆர்டி வழித்தடங்கள், கடல் அலை சுவர்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதகளுக்கு $90 பில்லியன் புதிய முறிகள் வெளியீடு
2021ல் ஜிஎஸ்டி அதிகரிப்பு இராது, ஆனால் 2022 முதல் 2025 வரை அதிகரிப்பு இடம்பெறக்கூடும். ஜிஎஸ்டி உயர்வால் ஏற்படக்கூடிய சுமைகளைக் குறைக்க $6 பில்லியன் உத்தரவாதத் திட்டம். 2022 ஜனவரி முதல் குறை மதிப்புள்ள பொருட்களுக்கு ஜிஎஸ்டி நீட்டிப்பு.
கொவிட்-19 மீட்சித் திட்டத்துக்கு $11 பில்லியன். இதில் சென்ற ஆண்டில் மிச்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் $9.3 பில்லியன், இருப்பில் இருந்து எடுக்கப்படும் 1.7 பில்லியன் ஆகியவை அடங்கும். இருப்பிலிருந்து மொத்தம் எடுக்கப்படும் தொகை $53.7 பில்லியனாக இருக்கும்.
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் 2021 தொடர்பான விரிவான செய்திகளுக்கு, தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்! https://www.tamilmurasu.com.sg/