டான் டோக் செங் மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை

டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைச் சந்திக்க வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அந்த மருத்துவமனை இன்று (ஏப்ரல் 29) பிற்பகல் அறிவித்துள்ளது.

“நிலைமையைக் கட்டுக்குள் வைக்கவும் ஊழியர்கள், நோயாளிகளின் பாதுகாப்பைக் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று அந்த மருத்துவமனை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.

அந்த மருத்துவமனையில் பொது சிகிச்சைப் பிரிவில் (general ward) பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நோயாளிகளைச் சந்திக்க மருத்துவமனை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

டான் டோக் செங் மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் காலம் வரை அவர்களைச் சந்திக்க இருவருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுவதாக நேற்று (ஏப்ரல் 28) இரவு அந்த மருத்துவமனை தெரிவித்திருந்தது.

ஆனால், மருத்துவமனை அடுத்த அறிவிப்பை வெளியிடும் வரை நோயாளிகளைச் சந்திக்க வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என அந்த மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!