சமூக அளவில் 18 பேர், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் ஒருவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 14) புதிதாக 25 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூரில் தொற்று உறுதியான அந்த 19 பேரில் 17 பேர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.
அவர்களில் 13 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. எஞ்சிய நால்வருக்கு கண்காணிப்பு பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஆறு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,301 ஆக உள்ளது.

