இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி

கொவிட்-19க்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக சிங்கப்பூர் வருவதற்குக் குறிப்பிட்ட சில நாட்டுப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அனைத்துலக கொவிட்-19 சூழலுக்கு ஏற்ப, எல்லைகள் தொடர்பான நடவடிக்கைகளில் மாற்றம் செய்துவரும் சிங்கப்பூர், இனி ஆறு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளை வரும் புதன்கிழமை (அக்டோபர் 27) முதல் அனுமதிக்கும்.

கடந்த 14 நாட்களில் இந்தியா, இலங்கை, நேப்பாளம், மியன்மார், பங்ளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பயணிகள், சிங்கப்பூருக்கு வரவும் சிங்கப்பூர் வழியாக வேறு நாட்டுக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவர் என்று இன்று சனிக்கிழமை (அக்டோபர் 23) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இருப்பினும், குறுகியகால வருகையாளர்களுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது.

இந்த ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், சிங்கப்பூர் வந்ததும் நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடத்தில் 10 நாட்களுக்குத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

இதற்கிடையே, மலேசியா, இந்தோனீசியா உட்பட வேறு பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் புதன்கிழமை முதல் தளர்த்த உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. இவ்விரு நாடுகளைச் சேர்ந்தோர், தாங்களே ஓர் இடத்தைத் தேர்வுசெய்து அங்கு தங்களின் 10 நாள் தனிமை உத்தரவை நிறைவேற்றலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!