கூடுதல் தடுப்பூசி குறித்து அறிவுரை

கூடுதல் தடுப்பூசி குறித்து அறிவுரை

2 mins read

சுயமாக மேற்­கொள்­ளப்­படும் 'ஏஆர்டி' பரி­சோ­தனையின் மூலம் தங்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது தெரி­ய­வந்­தோ­ரை­யும் 'பூஸ்­டர்' எனும் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மாறு சுகா­தார அமைச்சு கேட்­டுக்­கொண்­டுள்ளது. கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொள்­வது நீண்­ட­கா­லத்­தில் கொவிட்-19க்கு எதி­ரான பாது­காப்பை வழங்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ரும் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொள்­ள­வேண்­டும் என்­றும் சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது. அத்­த­கை­யோர் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வதில் அபா­யம் ஏதும் இல்லை என்று கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­திற்­கான வல்­லு­நர் குழு தெரி­வித்­ததாக அமைச்சு சுட்­டி­யது.

"உங்­க­ளுக்­கும் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போடு­மாறு நமது தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது," என்று அமைச்சு சொன்­னது. அவர்கள் திருப்­பி­ய­னுப்­பப்­ப­ட­மாட்­டார்­கள் என்­றும் அமைச்சு கூறி­யது.

எனி­னும், கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான பிறகு கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள விரும்­பா­தோர், கிருமித்­தொற்று ஏற்­பட்­ட­போது மருத்­து­வ­ரி­டம் சென்­றோர், வெளி­நா­டு­களிலிருந்து சிங்கப்­பூ­ருக்கு வரும்­போது கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது தெரி­ய­வந்­த­வர்­கள் ஆகி­யோ­ரின் மருத்­து­வத் தகவல்­களில் கிருமித்தொற்று ஏற்பட்டது குறிப்­பி­டப்­பட்­டால் அவர்­கள் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாமல் இருக்கலாம். மருத்­து­வத் தக­வல்­களை 'ஹெல்த்­ஹப்' தளத்­தில் காண­லாம்.

"கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தற்கு சமம். அது, உங்கள் மருத்துவத் தகவல்களில் தானா­கவே பதி­வா­கி­விடும், நீங்­கள் எது­வும் செய்­யத் தேவை­யில்லை," என்­றும் சுகா­தார அமைச்சு கூறி­யது.

சொந்­த­மாக மேற்­கொள்­ளப்­பட்ட ஏஆர்டி பரி­சோ­தனை, வேலை­யி­டங்­களில் திட்­ட­மிட்­ட­படி அடிக்­கடி நடத்தப்­படும் பரி­சோ­த­னை­கள் போன்றவற்றின் மூலம் கொவிட்-19க்கு ஆளானது தெரி­ய­வந்­தோ­ரின் மருத்­து­வத் தக­வல்­களில் அது குறிப்­பி­டப்­ப­டாது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படா­விட்­டா­லும் உடல்­ந­லம் சரி­யில்­லா­தோர் விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்து வீட்டி­லேயே இருக்­கு­மாறு சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் பொது­மக்­க­ளைக் கேட்டுக்­கொண்­டி­ருந்­தார். சீனப் புத்­தாண்டு நெருங்கும் வேளை­யில், மிக­வும் விவே­க­மாக நடந்துகொள்­ளு­மா­றும் அவர் ஆலோ­சனை வழங்­கி­னார்.