விமானப் பயணம் தொடர்ந்து சூடுபிடிக்கும் நிலையில் எஸ்ஐஏ ஆயத்தம் 2,000 விமான ஊழியர்களை வேலையில் சேர்க்க முயற்சி

விமானப் பயணம் தொடர்ந்து சூடுபிடிக்கும் நிலையில் எஸ்ஐஏ ஆயத்தம் 2,000 விமான ஊழியர்களை வேலையில் சேர்க்க முயற்சி

2 mins read

உல­க­ள­வில் விமா­னப் பய­ணங்கள் தொடர்ந்து வேக­மாக சூடு­பி­டிக்­கின்­றன. இந்த நிலை­யில், சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் ஏறக்­கு­றைய 2,000 விமான ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்க முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

ஏற்­கெ­னவே மார்ச் முதல் அத்­த­கைய 800க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் வேலை­யில் சேர்க்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

அவர்­களில் ஏறக்­கு­றைய ஐந்து பேரில் மூவர் முன்­னாள் விமான ஊழி­யர்­க­ளாக வேலை பார்த்­த­வர்­கள்.

தேவைப்­ப­டக்­கூ­டிய இதர ஊழி­யர்­கள் நடப்பு நிதி ஆண்டு முடிவு வாக்­கில் வேலை­யில் சேர்க்­கப்­பட்டு விடு­வார்­கள் என்று எஸ்­ஐஏ நிறு­வ­னம் தெரி­வித்­தது.

எஸ்­ஐஏ குழு­மம் 2020 செப்­டம்­ப­ரில் கிட்­டத்­தட்ட 4,300 வேலை­களைக் குறைத்­தது.

அந்த ஆள்கு­றைப்­புக்கு முன்­ன­தாக எஸ்­ஐஏ குழு­மத்­தில் கிட்­டத்­தட்ட 3,200 விமா­னி­களும் ஏறக்­கு­றைய 11,000 விமா­னச் சிப்­பந்­தி­களும் வேலை பார்த்­த­னர்.

இத­னி­டையே, இதன் தொடர்­பில் கருத்து தெரி­வித்த எஸ்­ஐஏ தலைமை நிர்­வாக அதி­காரி கோ சூன் போங், எஸ்­ஐ­ஏ­வில் விமானி­கள் எண்­ணிக்கை இன்­ன­மும் கொவிட்-19க்கு முந்­திய எண்­ணிக்­கை­யு­டன் ஒத்து இருப்­ப­தாகத் தெரி­வித்­தார்.

எஸ்­ஐஏ நிறு­வ­னத்­தின் இப்­போ­தைய விமா­னி­கள், விமான சிப்­பந்­தி­களில் கிட்­டத்­தட்ட எல்லா­ரும் அதே­போல கிட்­டத்­தட்ட எல்லா விமா­னங்­களும் முறை­யாக பறக்­கத் தொடங்­கி­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

என்­றா­லும் விமா­னப் பய­ணத் துறை தொற்­றில் இருந்து இன்­னமும் மீட்சி கண்டு வரு­வ­தால் விமான சிப்­பந்­தி­களும் சரி விமா­னங்­களும் சரி நூற்­றுக்­கு­நூறு முற்­றி­லும் சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றாரவர்.

இருந்­தா­லும் நடை­முறை­யில் எல்­லாம் தயா­ராக இருக்­கும் வகை­யில், அவர்­களைப் பணி­களி­ல் ஈடு­ப­டுத்­து­வ­தாக அவர் கூறினார்.

எஸ்­ஐஏ நிறு­வ­னம் தனது விமான சிப்­பந்­தி­க­ளின் எண்­ணிக்­கையை முன்பு இருந்த அள­வுக்கு முற்­றி­லும் அதி­க­ரிக்­க­வேண்­டிய தேவை இப்­போ­தைக்கு இல்லை என்று அவர் விளக்­கி­னார்.

இந்­தக் காலாண்­டில் பய­ணி­களின் அளவு, கொவிட்-19க்கு முன்பு இருந்த அள­வில் 61 விழுக்­காட்டை எட்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த அளவு 67 விழுக்­காடு ஆகும் வாய்ப்பு உள்ளது. இதுவே அதற்­கான கார­ணம் என்­றார் அவர்.

கொஞ்ச காலத்­திற்குச் சில சந்­தை­கள் மூடி இருக்க வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இப்­படி கொஞ்ச காலத்­திற்கு சீனா மூடி இருக்க வேண்­டிய சூழல் இருக்­க­லாம். அது எப்­போது திறக்­கப்­படும் என்­பது நமக்­குத் தெரி­யாது.

ஆகை­யால் இப்­போ­தைக்கு நூறு விழுக்­காடு பழை­ய­படி திரும்ப வேண்­டிய தேவை இல்லை என்­றார் அவர்.

இப்­போது விமா­னங்­களைக் கையாள போதிய அள­விற்கு விமான சிப்­பந்­தி­கள் இருக்­கிறார்கள்.

என்­றா­லும் எஸ்­ஐ­ஏ­வின் பயணிகள் சேவை மையத்­து­டன் அதி­கம் பேர் தொடர்­பு­கொள்­வதால் அவற்­றைச் சமா­ளிக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்­றார் தலைமை நிர்­வாகி.