சீன ராணுவ உயரதிகாரி: அத்துமீறல்கள் முறியடிக்கப்படும்

சீன ராணுவ உயரதிகாரி: அத்துமீறல்கள் முறியடிக்கப்படும்

1 mins read
e7e91fa8-cb2b-4df0-a8dd-cc8edfcbf575
சியாங்ஷான் தற்காப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்ட சீன ராணுவத்தின் உயரதிகாரியான லெஃப்டினென்ட் ஜெனரல் ஹெ லெய் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: தென்சீனக் கடல் உட்பட தன்வசம் உள்ள பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டுப் படைகள், கப்பல்கள் விரட்டியடிக்கப்படும் என்று சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செப்டம்பர் 12ஆம் தேதியன்று தெரிவித்தார்.

தென்சீனக் கடல் உட்பட சர்ச்சைக்குரிய கடற்பகுதிளில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து அதிருப்திக் குரல் எழுப்பி வருகிறது.

சியாங்ஷான் தற்காப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்ட சீன ராணுவத்தின் உயரதிகாரியான லெஃப்டினென்ட் ஜெனரல் ஹெ லெய் செய்தியாளர்களிடம் பேசினார்.

“தென்சீனக் கடல் தொடர்ந்து அமைதியான கடற்பகுதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். திரைக்குப் பின்னாலிலிருந்து அமெரிக்கா காய்களை நகர்த்தினாலோ, சீனாவுக்கு எதிராக மற்ற நாடுகளைத் தூண்டிவிட்டாலோ அல்லது அமெரிக்காவே களத்தில் இறங்கினாலோ சீன ராணுவம் பொறுமையுடன் இருக்காது.

“சீனாவுக்கு எதிராக எங்கள் வசம் உள்ள பகுதிகளுக்குள் வெளிநாட்டுப் படைகள் அத்துமீறி நுழைந்தால் அவற்றை மிகுந்த முனைப்புடன் எதிர்கொண்டு முறியடிப்போம்,” என்று லெஃப்டினென்ட் ஜெனரல் ஹெ கூறினார்.

குறிப்புச் சொற்கள்