தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சை எச்சரித்த சீன ராணுவம்

1 mins read
31bb5967-71c7-4f55-8f06-944b22516d34
தென்சீனக் கடலில் சீனாவின் கடலோரக் காவல்படை கப்பல். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: தென்சீனக் கடலில் தன்னைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பிலிப்பீன்சுக்குச் சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கம்போல் தென்சீனக் கடலில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டதாக சீன ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) கூறியது.

தென்சீனக் கடலில் பதற்றநிலையை மோசமாக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் நடந்துகொள்ளக்கூடாது என்று சீன ராணுவம் வலியுறுத்தியது.

தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று அது கூறியது.

தென்சீனக் கடலின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளும் தனக்குச் சொந்தமானவை என்று சீனா கூறி வருகிறது.

தென்சீனக் கடல் கப்பல் பாதைகள்மூலம் ஆண்டுக்கு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$3.85 டிரில்லியன்) பெறுமானமுள்ள வர்த்தகம் நடைபெறுகிறது.

தென்சீனக் கடலின் சில பகுதிகளை பிலிப்பீன்ஸ், புருணை, மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

குறிப்புச் சொற்கள்