‘கொய்னு’ சூறாவளியால் பிலிப்பீன்சில் திடீர் வெள்ளம்

மணிலா: பிலிப்பீன்சில் வீசிவரும் ‘கொய்னு’ புயல் திங்கட்கிழமை காலை சூறாவளியாக உருவெடுத்தது.

இதனால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படும் அபாயமுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையமான ‘பகாசா’ எச்சரித்துள்ளது.

இந்தச் சூறாவளி பிலிப்பீன்சின் ககாயன் மாநிலத்தின் வடபகுதியான அபாரிக்கு கிழக்கே 675 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதனால், அங்கு மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்றும் 150 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறைக்காற்றும் வீசுகிறது என ‘பகாசா’ தெரிவித்துள்ளது.

வடமேற்குத் திசை நோக்கி மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் சூறாவளி நகர்கிறது என்றும் அந்நிலையம் குறிப்பிட்டது.

இந்தச் சூறாவளியால் அங்கு தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, லுசோன் தீவில் மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்துவருகிறது.

‘கொய்னு’ சூறாவளி வரும் வியாழக்கிழமை பிலிப்பீன்சில் கரையைக் கடக்கும் என முன்னுரைக்கப்படுவதால் தைவானின் தெற்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதாக ‘பகாசா’ தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!