செம்பவாங்கில் உள்ள பெத்தெம்பாத்தான் மலாயு செம்பவாங் பள்ளிவாசல், தொற்றுக்கு எதிரான சுத்தப்படுத்தும் பணிக்காக இரண்டு நாட்கள் மூடப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இன்று (ஏப்ரல் 27) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளிவாசலுக்கு வருகை மேற்கொண்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முயிஸ் தெரிவித்தது.

