நியூசிலாந்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் காயமுற்றனர்.
அவர்களை ஆடவர் ஒருவர் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டோரில் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
மத்திய டனடின் நகரில் இத்தாக்குதல் நடத்திய ஆடவரை போலிசார் கைது செய்தனர்.
அந்த ஆடவர் இரண்டு கத்திகளை ஏந்திக்கொண்டு பேரங்காடி ஊழியர்களைத் தாக்கியதாகவும் அவரைத் தடுக்க முற்பட்ட வழிப்போக்கர்களும் காயமடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நியூசிலாந்து ஊடகத்திடம் தெரிவத்தனர்.
பேரங்காடியில் இருந்தவர்களை அந்த நபர் தாக்கியபோது அவர்களுக்கு உதவி செய்ய விரைந்த வழிப்போக்கர்களின் வீரத்தை பிரதமர் ஆர்டன் பாராட்டினார்.
தாக்குதலின் காரணமாக பாதிக்கப்பட்ட பேரங்காடியின் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாக அப்பேரங்காடியின் நிர்லாக இயக்குநர் ஸ்பென்சர் சென் தெரிவித்தார்.