மலேசியாவில் வெப்ப அலை ஜூன் வரை நீடிக்கக்கூடும்

மலேசியாவில் வெப்ப அலை ஜூன் வரை நீடிக்கக்கூடும்

2 mins read
5a47a067-0441-442c-b74c-bc3021a322fd
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் தற்­போது நில­வி­வ­ரும் வெப்ப அலை ஜூன் வரை நீடிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக தேசிய வானிலை ஆய்வு நிலை­யம் தெரி­வித்­துள்­ளது.

அதன் பிறகு செப்­டம்­பர் வரை சரா­சரி அள­வுக்­கும் குறை­வாக மழை பெய்­யும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.

வறண்ட வானிலை கார­ண­மாக ஜூன் முதல் செப்­டம்­பர் வரை புகை­மூட்­டம் திரும்­பக்­கூடும் என்று தேசிய வளங்­கள், சுற்­றுப்­புற, பரு­வ­நிலை மாற்ற அமைச்­சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறி­னார்.

"வெப்­பம் அதி­க­ரித்­துள்­ள­தால் வனப்­ப­கு­தி­யில் கட்­டுக்­க­டங்­காத தீயி­னால் புகை­மூட்­டம் திரும்­பு­வதற்­கான சாத்­தி­யம் அதி­கம்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் அவர் சொன்­னார்.

மலே­சி­யா­வில் தொடர்ந்து மூன்று நாள்­க­ளாக சரா­சரி அதி­க­பட்ச வெப்­ப­நிலை 37 டிகிரி செல்­சி­ய­சைத் தாண்­டி­னால் வெப்ப அலை எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஏப்­ர­லில் பல்­வேறு மாநிலங்­க­ளுக்கு வெப்ப அலை எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. ஏப்ரல் 22ஆம் தேதி நெகிரி செம்­பி­லான் மாநி­லத்­தில் வெப்­ப­நிலை ஆக அதி­க­மாக 38.4 டிகிரி செல்­சி­யஸ் எனப் பதி­வா­னது.

வெப்ப அலை­யின்­போது நாடு முழு­வ­தும் உள்ள பள்­ளி­களில் வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளுக்கு தற்­கா­லி­க­மா­கத் தடை விதிக்க கல்வி அமைச்சு கடந்த புதன்­கிழமை உத்­த­ர­விட்­டது.

கிளந்­தான் மாநி­லத்­தில் வெப்பத்­தாக்­கம், கடும் நீரிழப்பு ஏற்பட்டு ஏப்­ரல் 25ஆம் தேதி 11 வய­துச் சிறு­வன் உயி­ரி­ழந்­தார். கடும் நீரிழப்பு ஏற்­பட்டு அதே மாநி­லத்­தில் அதே நாள் 19 மாதக் குழந்தை இறந்­து­விட்டது.

வெப்ப அலைக்கு மத்­தி­யில் காற்­றுத்­த­ரம் குறித்த கவ­லை­யும் மக்­க­ளி­டையே எழுந்­துள்­ளது.

ஜோகூர், பினாங்கு, கெடா, சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான், கிளந்­தான், திரங்­கானு உள்­ளிட்ட மாநி­லங்­களில் ஏப்­ரல் 16ஆம் தேதி காற்­றுத்­தர குறி­யீடு (ஏபிஐ) 150க்கு மேல் உயர்ந்­தது. 101க்கும் 200க்கும் இடைப்­பட்ட குறி­யீடு, காற்­றுத்­த­ரம் சரி­யில்லை என்­பதைக் குறிக்­கிறது.

புகை­மூட்ட பாதிப்­பைத் தணிக்­கும் நோக்­கில், தீப்­பி­டிக்­கும் சாத்­தி­யம் அதி­கம் உள்ள காட்­டுப் பகு­தி­க­ளை­யும் குப்பை நிரப்­பும் நிலங்­க­ளை­யும் கண்­கா­ணிக்க பல்­வேறு துறை­க­ளு­டன் சேர்ந்து தமது அமைச்சு பணி­யாற்றி வரு­வ­தாக திரு நிக் நஸ்மி தெரி­வித்­தார்.