உரிமமின்றி இயங்கிய உணவகத்தில் நாய், பூனை இறைச்சி பரிமாறப்பட்டதாகச் சந்தேகம்; ஐவர் கைது

ஹாங்காங்: ஹாங்காங்கில் உரிமமின்றி இயங்கிவந்த உணவகத்தில் நாய், பூனை இறைச்சி பரிமாறப்பட்டதன் சந்தேகத்தில் பிப்ரவரி 29ஆம் தேதியன்று ஐவர் கைது செய்யப்பட்டனர்.

மோங் கோக் பகுதியிலுள்ள 500 சதுர அடி வளாகத்தில் பல அமைப்புகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் சுமார் 35 கிலோ உறைந்த இறைச்சி கைப்பற்றப்பட்டது.

ஐவரில் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் காலம் ஹாங்காங்கில் தஞ்சம் புகுந்தோர் நால்வர். இவர்கள் வேலை செய்ய அனுமதியும் இல்லை. அத்துடன் விலங்கு வதை தொடர்பிலும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாய்களையும் பூனைகளையும் கொல்வதும் அவற்றின் இறைச்சியை விற்பதும் ஹாங்காங்கில் சட்டவிரோதம்.

கைதானோரில் 50 வயது ஆடவர், தன் வீட்டை உரிமமின்றி ஓர் உணவகமாக மாற்றி நடத்திவந்ததாகக் கூறப்படுகிறது. கைதான குடிநுழைவு குற்றம் புரிந்தோரில் 16 வயது இளைஞன் ஒருவரும் அடங்குவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!