நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு; அனைத்துப் பயணிகளும் மீட்பு

பேங்காக்: தாய்லாந்துக் கடற்பகுதியில் கோ தாவ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஏப்ரல் 4ஆம் தேதி காலை தீப்பற்றி எரிந்தது.

அதில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்து நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கு சுராட் தானியிலிருந்து புறப்பட்டு கோ தாவ் தீவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது கோ ஜாரோன் 2 எனும் பெயர் கொண்ட படகில் தீ மூண்டது என்று கோ தாவ் காவல்துறைத் தலைவர் போல் கோல் சொக்சாய் சுத்திமெக் கூறினார்.

தீச்சம்பவம் குறித்து தாய்லாந்து நேரப்படி காலை 7 மணிக்குத் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

படகில் 97 பயணிகள், 11 சிப்பந்திகள் ஆகியோருடன் சரக்குகளும் இருந்தன.

கோ தாவ் படகுத்துறையைப் படகு நெருங்கியபோது அதன் இயந்திர அறையில் தீ மூண்டது.

தகவல் கிடைத்ததும் கோ தாவ் தீவில் படகுச் சேவையை நடத்துவோரும் அதிகாரிகளும் படகில் இருந்தோரைக் காப்பாற்ற படகுகளை உடனடியாக அனுப்பிவைத்தனர்.

படகில் இருந்தோர் அனைவரும் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!