விரட்டிய தைவான் கடலோரக் காவல்படை; நீரில் மூழ்கி இரு சீன மீனவர்கள் உயிரிழப்பு

தைவான் கடலோரக் காவல்படையினர் விரட்டிச் சென்றபோது படகு கவிழ்ந்து சீன மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தைவானின் வடகோடியிலுள்ள கின்மென் தீபகற்பத்தை ஒட்டிய கடற்பகுதியில் நிகழ்ந்தது.

அந்தச் சீன மீன்பிடிப் படகு புதன்கிழமையன்று (பிப்ரவரி 14) அத்துமீறி தனது கடற்பகுதியில் நுழைந்ததாகத் தைவான் தெரிவித்தது.

அந்த மீன்பிடிப் படகில் நான்கு மீனவர்கள் இருந்தனர் என்றும் அவர்கள் தங்கள் படகைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து, அப்படகைக் கடலோரக் காவல்படையினர் விரட்டிச் சென்றபோது அது நீரில் கவிழ்ந்தது.

படகு கவிழ்ந்ததை அடுத்து, அதிலிருந்த மீனவர்கள் நால்வரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஆயினும், அவர்களில் இருவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் மற்ற இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தைவான் கடலோரக் காவல்படை தெரிவித்தது.

இந்நிலையில், தன் மீனவர்கள் இருவர் மாண்ட சம்பவத்திற்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!