தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து முழு கொள்ளளவில் மேட்டூர் அணை நீர்மட்டம்

1 mins read
14f91cd8-a2a1-47d0-879d-dcc0a7072d0c
கடந்த ஐந்து நாள்​களாக மேட்டூர் அணை​யின் நீர்​மட்​டம் முழு கொள்​ளள​வான 120 கனஅடி​யில் நீடிக்​கிறது.  - படம்: இந்திய ஊடகம்

தருமபுரி: மேட்​டூர் அணையின் நீர்​மட்​டம் கடந்த ஐந்து நாள்​களாக முழு கொள்​ளள​வான 120 கனஅடி​யில் நீடிக்​கிறது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படு​கிறது.

அணைக்குக் கடந்த சில நாள்​களாக நீர்​வரத்து அதி​கரித்​திருந்தது. தற்போது அது மீண்​டும் குறை​யத் தொடங்​கி ​உள்​ளது.

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வினாடிக்கு 19,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து படிப்​படி​யாக குறைந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) 10,850 கனஅடியாக இருந்​தது. காவிரி டெல்டா பாசனத்​துக்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

அதே​போல, கிழக்​கு, மேற்கு கால்​வாய் பாசனத்​துக்கு 850 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணைக்கு வரும் நீரின் அளவும் வெளி​யேற்​றப்​படும் நீரின் அளவும் சமமாக உள்​ளது.

இதன் காரண​மாக கடந்த ஐந்து நாள்​களாக அணை​யின் நீர்​மட்​டம் முழு கொள்​ளள​வான 120 கனஅடி​யில் நீடிக்​கிறது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வினாடிக்கு 9,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை 16,000 கனஅடி​யாக அதி​கரித்​தது.

குறிப்புச் சொற்கள்