தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2016ல் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் பொது ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை தொலைத்தொடர்பு, ஊடகத் துறைகளில் உள்ள போட்டித்தன்மையை ‘மேலும் ஒத்திசைவானதாகவும் சீரானதாகவும்’ ஆக்கும்.
அதே வேளையில், ஊடகத்துறையின் போட்டியையும் கட்டமைப்பையும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தற்போது, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் செய்தித்தாள் வெளியீட்டாளர் என்று வரையறுக்கப்பட்டவர் அல்லது ஒளி/ஒலிபரப்பு உரிமம் வைத்திருப்போர் அல்லது துணை ஊடக சேவை வழங்குநர்கள் ஓர் ஊடக நிறுவனத்தில் 30 விழுக்காடு பங்குகளைப் பெறுவதற்கு முன்னர் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள், இக்கட்டுப்பாடுகளை மேலும் விரிவாக்குகின்றன.
30 விழுக்காடு அல்லது அதற்கு மேற்பட்ட உரிமை நலன்களைப் பெறும் எந்தவொருவரும் -உரிமம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் - ஒழுங்குபடுத்துநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இதே தரநிலை தொலைத்தொடர்பு தொழில்துறையில் ஏற்கனவே உள்ளது.
போட்டி எதிர்ப்பு மனப்பான்மைக்கு மேலும் சீரான அணுகுமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தொழிலில் அதிகாரப் பகிர்வுக்கு ஆணை வழங்கும் அதிகாரத்தை தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து அமைச்சருக்கு மாற்றவது மற்றொரு பரிந்துரை.
இதன்மூலம், ஊடக சேவைகளுக்கான சந்தையில் நுழைவதை போட்டியாளர்களுக்கு கடினமாக்குவதாகக் கருதப்பட்டால், ஆதிக்கம் செலுத்தும் ஓர் ஊடகத்தின் சொத்துகளை பன்முகப்படுத்த அல்லது வணிகங்களைத் தனியாகப் பிரிக்க கட்டாயப்படுத்த முடியும்.
மசோதா, சர்ச்சைத் தீர்வு செயல்முறை குறித்தும் மறுஆய்வு செய்கிறது.
நகல் குறிப்புச் சட்டம், முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர் தனது முடிவுகளையும் இலக்குகளையும் மறுபரிசீலனை செய்வதற்கான புதிய நடைமுறையை முன்மொழிகிறது.
புதிய மசோதா குறித்த பொது ஆலோசனை ஜனவரி 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

