https://www.straitstimes.com/tech/work-on-ai-missions-have-begun-starting-with-aviation-sector-josephine-teo
அடுத்த பத்தாண்டுகளில் சிங்கப்பூர் தனது விமானப் போக்குவரத்துத் திறனை இரட்டிப்பாக்க உள்ள நிலையில், பயணிகளை பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நுழைவாயிலிலிருந்து மற்றொரு நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்வது, பல முனையங்கள் வழியாகப் பயணிகளின் உடைமைகளை வழங்குவது, ஓடுபாதைகளில் விமானங்களின் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டை வரிசைப்படுத்துவது போன்ற பணிகளை நிர்வகிக்க செயற்கை நுண்ணறிவு கருவிகள் உதவக்கூடும்.
நாட்டின் நான்கு முக்கியச் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை கோடிட்டுக் காட்டிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, இந்தச் சவால்களுக்கான தீர்வுகள் உலக அரங்கில் சிங்கப்பூரைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தும் என்று கூறினார்.
“தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள், சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, உலகின் பிரச்சினைகளையே தீர்க்கக்கூடியவை. அவை தங்கள் துறைகளில் வலுவான, புரட்சிகரமான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கான தொடக்கப் புள்ளிகளாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்று திருவாட்டி டியோ கூறினார்.
“விமானப் போக்குவரத்துத் துறையில் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன,” என்ற அவர், “சிங்கப்பூர் உலகிற்கான ஓர் உயிருள்ள ஆய்வகமாக எப்படி இருக்க முடியும் என்பதை நமது இணைப்புச் சவால்கள் தெளிவாகக் காட்டுகின்றன,” என்று கூறினார்.
கபெல்லா ஹோட்டல் செந்தோசா ஹோட்டலில், சிங்கப்பூரின் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் ஆசியாடெக் x உச்சநிலை தொழில்நுட்ப மாநாட்டில், புதன்கிழமையன்று (மே 20) அவர் பேசினார்.
“பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அடுத்த தலைமுறை விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நமக்குத் தேவைப்படும். ஐந்தாவது முனையத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவக்கூடிய பல அற்புதமான வாய்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்,” என்று அமைச்சர் டியோ கூறினார்.
தற்போது கட்டப்பட்டு வரும் சாங்கி விமான நிலைய ஐந்தாவது முனையம், 2030களின் மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முனையம், அடுத்த பத்தாண்டுகளில் சாங்கி விமான நிலையம் ஆண்டுதோறும் 140 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை செய்ய உதவும். இது 2025ல் அதன் 90 மில்லியன் கொள்ளளவை விட 55 விழுக்காடு அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
உலகின் மிகப்பெரிய தானியங்கி கொள்கலன் முனையமாக அமையவிருக்கும் துவாஸ் துறைமுகம், புதிய தீர்வுகளை உருவாக்குவதற்குப் பயனுள்ள சிக்கலான செயல்பாடுகள் குறித்த விரிவான தரவுத் தொகுப்புகளையும் கொண்டுள்ளது என்று அமைச்சர் விவரித்தார்.
துவாஸ் துறைமுகம் நான்கு கட்டங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் இது 2040களில் நிறைவடையும். 2027ல் மேம்பாட்டுப் பணியின் முதல் கட்டம் நிறைவடையும்போது, 20 மில்லியன் கப்பல் கொள்கலன்களைக் கையாளக்கூடிய 21 கப்பல் நிறுத்துமிடங்கள் இதில் இருக்கும்.
பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் சிங்கப்பூரின் நான்கு முக்கியச் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களான, மேம்பட்ட உற்பத்தி, நிதிச் சேவைகள், இணைப்பு, சுகாதாரம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
உற்பத்தித் துறையை மேம்படுத்துவதில், உருவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, மனித இயந்திரவியல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், தாக்கத்தின் வீச்சும் அளவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அமைச்சர் டியோ கூறினார்.
உதாரணமாக, நிதிச் சேவைகளில், பெருகிவரும் நுட்பமான நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடவும், நிதி மேலாண்மைக் கருவிகளை உருவாக்கவும், அடுத்த தலைமுறை எல்லை கடந்த பணப் பரிமாற்ற முறைகளைச் செயல்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு சிங்கப்பூருக்கு உதவும்.
சுகாதாரத் துறையில், நோயறிதல், மருத்துவ முடிவெடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவு உதவ முடியும், வளத் திட்டமிடலை மேம்படுத்த முடியும். மேலும் நோயாளிகளுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் அதிக தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்க முடியும்.
NAIS 2.0ன் கீழ் புதுப்பிக்கப்பட்ட மற்றொரு முன்னுரிமை, சிங்கப்பூரின் பொது ஆராய்ச்சி நிறுவனங்களில் நிறுவப்படும் சிறப்பு ஆராய்ச்சி மையங்களை (RCEs) நிறுவுவதன் மூலம் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை மேற்கொள்வதாகும் என்றும் அமைச்சர் டியோ விளக்கினார்.

