2,500 ஆண்டு பழைமையான படிக்கட்டு அமைப்புடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு

2,500 ஆண்டு பழைமையான படிக்கட்டு அமைப்புடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு

2 mins read
853528bf-0207-4e32-b9f4-5a8bbd44b178
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தென்காசி மாவட்டம், மலையப்பட்டி பகுதியில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. - படம்: இந்து தமிழ் திசை

தென்காசி: தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது 2,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த படிக்கட்டு கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தென்காசி மாவட்டம் மலையப்பட்டி பகுதியில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அங்கு படிக்கட்டுகளைக் கொண்ட, செங்கல் கட்டுமானக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள செங்கற்கள் 40 செமீ நீளமும் 20 செமீ அகலமும் கொண்டதாக அளவில் பெரியதாக உள்ளன என்றும் கிணற்றின் உட்பகுதியில் நீர்மட்டம் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கிணறு பண்டைய கால மக்களுக்கு கோடைக் காலங்களில் முக்கியமான நீராதாரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் ஆய்வு நீடிக்கும்போது கிணற்றின் முழு ஆழம் எவ்வளவு என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

கீழடி, காவிரிப்​பூம்​பட்டினம், அரிக்​கமேடு போன்ற பகு​தி​களில் கிடைக்​கக்கூடிய செங்​கல் அமைப்​பு​களைப் போன்றே இந்தக் கிணற்​றின் கட்​டு​மான​மும் உள்​ளது.

தமிழகத்​தில் வேறு எந்த அகழாய்​விலும் கண்​டறி​யாத வகை​யில் முதல்முறை​யாக படிக்​கட்டு அமைப்​புடன் இந்தக் கிணறு கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இந்தக் கிணற்​றின் படிக்​கட்​டு​கள் கற்​களாலும் கிணற்​றுச் சுவர்​கள் செங்​கற்​களாலும் கட்​டப்​பட்​டுள்​ளன. படிக்​கட்​டில் உள்ள தேய்​மானம் நீண்ட கால​மாக மக்​கள் இந்தக் கிணற்றைப் பயன்​படுத்தியிருப்பதைக் காட்​டு​கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மலையடிப்பட்டி அகழாய்வில் முது​மக்​கள் தாழிகள், வரையப்​பட்ட மூன்று பானை​கள் உள்ளிட்டவைக் கண்​டறியப்​பட்​டுள்​ளன.

மேலும், கண்​ணாடி மணி​கள், சுடுமண் சிற்பங்கள், விளை​யாட்​டுக்கற்​கள், கற்​கருவி​கள், இரும்​புப் பொருள்​கள், இரும்பு உருக்கின் கழி​வு​கள் ஆகியவற்றின் மூலம் நுண்கற்​காலம், இரும்​புக் காலம், வரலாற்றுத் தொடக்கக் காலம், வரலாற்​றுக் காலம் ஆகிய அனைத்து பண்​பாட்டுக் காலங்​களி​லும் இங்கு மக்​கள் வாழ்ந்​திருக்​கலாம் என அறிய முடிகிறது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்