பயணிகளின் சுகாதாரத்தை அறிய புதிய செயலி; சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் புத்தாக்க அறிமுகம்

பயணிகளின் சுகாதாரத்தை அறிய புதிய செயலி; சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் புத்தாக்க அறிமுகம்

2 mins read
228c4d2c-ba6a-4199-9e71-e2d4e09d55c7
படம்: ஓங் யி காங், ஃபேஸ்புக் -

விமா­னப் பய­ணி­க­ளின் கொவிட்-19 சோதனை முடி­வு­களை விரை­வில் அறிந்­து­கொள்ள ஏது­வாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் புதிய செயலி ஒன்றை சோதனை ஓட்டத்தில் விட்டுள்ளது.

தடுப்­பூசி போட்­டுக்கொள்­வோ­ருக்கு என தனி­யாக எந்­த­வி­தச் சான்­றி­த­ழும் இன்றி கடப்­பி­தழ் மூலம் ஒரு க்யூ­ஆர் குறி­யீடு வழி­யா­கக் கண்­ட­றிய இந்­­தச் செயலி வழி­வ­குக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

குடி­நு­ழை­வுத் துறை அதி­கா­ரி­கள் இந்த கியூ­ஆர் குறி­யீட்டை வரு­டு­வ­தன் மூலம் அந்­தப் பயணி தடுப்­பூசி போட்­டுள்­ளாரா இல்­லையா என்­ப­தை­யும் அவர்­க­ளின் கொவிட்-19 சோதனை முடி­வு­க­ளை­யும் அறிந்து­கொள்ள முடி­யும்.

இதன்­மூ­லம் பய­ணி­கள் சோத­னைக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கும் நேரம் குறை­யும் என்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

உல­கம் முழு­தும் விமா­னப் பய­ணி­க­ளுக்­கான தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட விவ­ரம் குறித்த விதி­முறை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரில் வந்­தி­றங்­கும் பய­ணி­கள் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட விவ­ரங்­கள் பற்றி அறிந்­து­கொள்­ளும் வகை­யிலும் கொவிட்-19 சோதனை முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையிலும் புதிய செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நாடு­க­ளுக்கு இடை­யே­யான எல்­லை­களை மீண்­டும் திறப்­பது குறித்து தொழில்­துறை சார்ந்த தரங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் வகை­யில் இந்­தப் புதிய சேவை குறித்து அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கத்­து­டன் இணைந்து செயல்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இந்­தச் செய­லியை தெமா­செக்­கின் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான அஃப்பி­னிடி தயா­ரித்­துள்­ளது.

தற்­போ­துள்ள விதி­மு­றைப்­படி சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள், பய­ணத்­திற்கு 72 மணி நேரங்­க­ளுக்கு முன்­பாக கொவிட்-19 சோதனை செய்­துகொண்­டி­ருக்க வேண்­டும்.

அவர்­கள் நோய்த்­தொற்­றால் பாதிக்­க­வில்லை என்­றால் மட்­டுமே அவர்­கள் பய­ணம் செய்ய அனு­மதிக்­கப்­ப­டு­வர்.

அத்­து­டன் அவர்­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மருத்­து­வச் சோத­னைக் கூடத்­தில் இருந்து அதற்­கான சான்­றி­த­ழைப் பெற்­றி­ருக்க வேண்­டும். பய­ணி­கள் கொவிட்-19 சோதனை செய்­து­கொண்­ட­தற்­கான சரி­யான சான்­றி­தழை வைத்­தி­ருக்­கின்­ற­னரா என்­பது குறித்து குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவ­டி­யில் சரி­பார்க்­கப்­படுகிறது.

இப்­போது புதி­தாக அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டுள்ள இந்­தச் சேவை­ முதன்முதலாக கோலாலம்பூர், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

ஜகார்த்தா, கோலா­லம்­பூர் ஆகிய நக­ரங்­களில் இருந்து வரும் விமா­னப் பய­ணி­கள், அந்­தந்த நக­ரங்­களில் குறிப்­பிட்ட மருந்­த­கங்­களில் கொவிட்-19 சோதனை செய்­து­கொள்­வ­தன் மூலம் இப்­போ­துள்ள புதிய சேவை­க­ளைப் பெற­மு­டி­யும்.

அந்த மருந்­த­கங்­களின் சோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் அதற்­கான அந்த முடிவுகள் மின்­னி­யல் வழி­யா­கவோ அல்­லது சான்­றி­தழ் மூல­மா­கவோ வழங்­கப்­படும்.

அந்தச் சான்­றி­தழ்­கள் க்யூ­ஆர் குறி­யீ­டு­க­ளைக் கொண்­டி­ருக்­கும். அந்த க்யூ­ஆர் குறி­யீ­டு­களை சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி அதி­கா­ரி­கள், திறன்­பேசி செயலி மூலம் வருடி கொவிட்-19 சோதனை முடி­வு­கள் பற்­றிய தர­வு­க­ளை உடனடியாகப் பெறு­வார்­கள்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் இந்­தப் புதிய சேவை வெற்­றி­க­ர­மாக செயல்­பட்­டால் மற்ற நக­ரங்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

குறிப்புச் சொற்கள்