ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையும் தேசிய நூலக வாரியமும் இணைந்து "வாசிக்கலாம் வாங்க" என்ற நிகழ்ச்சியை கடந்த மாதம் 24ஆம் தேதி விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகத்தில் நடத்தின. குடும்பத்துடன் நூலகத்திற்குச் சென்று தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு துணை இயக்குநர் திருமதி சாந்தி செல்லப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். தேசிய நூலக தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் திரு அழகிய பாண்டியன், நூலகத்தில் கிடைக்கும் வளங்களையும் வசதி களையும் பற்றி எடுத்துரைத்தார். சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகப் பேராசிரியர் முனைவர் அனிதா தேவி பிள்ளை, முனைவர் சியா டி யோங் அலெக்ஸியஸ் ஆகியோர் வாசிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
“வாசிக்கலாம், குடும்பத்துடன் வாங்க”
2 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2018 07:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!