காலணிக்குள் புகுந்த பாம்பு பள்ளி மாணவனை தீண்டியது

சேலம்: காலணிக்குள் பாம்பு புகுந் ததை அறியாமல் அதை அணிந்து சென்ற பள்ளி மாணவனை அது கடித்தது. இதையடுத்து அம்மாணவன் மருத்துவமனையில் அனும திக்கப் பட்டுள்ளான். சேலத்தைச் சேர்ந்தவர் முரளித ரன். இவரது 13 வயது மகன் சத்தியாஸ், உள்ளூர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற சிறுவன், வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனிக்க முற்பட்டபோது, காலணிக்குள் இருந்த பாம்பு அவனை தொந்தரவு செய்யத் துவங்கியுள்ளது. இதனால் அசௌகரியமாக உணர்ந்த சத்தியாஸ், ஏதும் கூறி னால், ஆசிரியர் ஏசுவாரோ என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்துள்ளான். எனினும் சிறுவன் படபடப்பாக இருந்ததைக் கண்டு சந்தே கமடைந்த ஆசிரியர், என்ன விஷயம்? என விசாரித்துள்ளார்.

இதையடுத்து தனது காலில் ஏதோ உறுத்துவது போல இருப்ப தாக கூறினான் சத்தியாஸ். அதற் குள் அந்தப் பாம்பு அவனைத் தீண்டியதாகத் தெரிகிறது. இதனால் சிறுவன் அலறித் துடிக்க, சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவரின் காலணியைக் கழற்ற, அதிலிருந்த சிறிய கட்டுவிரியன் பாம்பு வெளியே ஓடியது. இதைக் கண்ட ஆசிரியரும், சக மாணவர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பள்ளி நிர்வா கத்தினர் அப் பாம்பை அடித்து கொன்றதுடன், சத்தியாசை சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!