இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பெருவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் நேற்று அறிமுகம் கண்டது. உலகின் ஆக மோசமான போக்குவரத்து நெரிசல் நிலவும் நாடுகளில் ஒன்றான இந்தோனீசியாவில், அதனைச் சமாளிக்கும் பொருட்டு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஆதரவுடன் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 16 கி.மீ. தொலைவுக்கான இந்தத் திட்டப் பணியில் ரயில் போக்குவரத்தை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்கும் விழாவில் அதிபர் ஜோக்கோ விடோடோவும் மற்ற அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சுரங்கப் பாதையிலும் தரை யிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டம், மத்தியில் ஹோட்டல் இந்தோனீசியாவிலிருந்து தென் கிழக்கு ஆசிய மெகாலோபோலிஸ் வரை நீண்டுள்ளது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையேயான பயணத்துக்கு பொதுவாக இரண்டு மணிநேரம் பிடிக்கும்.
ரயில் சேவை அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளதையடுத்து பயண நேரம் 30 நிமிடமாகக் குறையும். இன்று முதல் பொது மக்கள் அந்த ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.
முதல் வாரத்தில் பயணத் துக்குக் கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தாவில் முதல் எம்ஆர்டி சேவை தொடங்கி வைக்கப்பட்டது
25 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 08:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!