திங்கட்கிழமை நடந்த இருநாட்டுச் சந்திப்பின்போது, வர்த்தகத் தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரனும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ராஸும் இரு நாட்டுக்கும் இடையிலான வலுவான, நீண்டகாலப் பொருளியல் உறவை மறுஉறுதிப் படுத்தியதாக வர்த்தகத் தொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது. இருநாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில் வாய்ப்பு களுக்குத் துணை புரியக்கூடிய வழிவகைகளையும் அமைச்சர்கள் கலந்து பேசியதாக அமைச்சின் அறிக்கை கூறியது. "சிங்கப்பூருக்கும் அமெரிக்கா வுக்கும் இடையில் வலுவான, இரு தரப்புக்கும் பயனளிக்கும் பொருளி யல் உறவு நிலவுகிறது. அமெரிக்கா- சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு இதை எடுத்துக்காட்டு கிறது," என்றார் திரு ஈஸ்வரன். மில்கன் கழகத்தின் உலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேற்கொண்ட லாஸ் ஏஞ்சலிஸ் பயணத்திற்கு இடையே திரு ராஸை அமைச்சர் ஈஸ்வரன் சந்தித்ததாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. "அமெரிக்காவுடனான உறவை விரிவுபடுத்தவும், அமெரிக்கா- சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆரம்பகால வெற்றிகளை மேன் மேலும் பெருக்கவும் நாங்கள் எதிர் பார்த்திருக்கிறோம்," என்றார் திரு ஈஸ்வரன்.2017-05-03 06:00:00 +0800
ஈஸ்வரன்: சிங்கப்பூர், அமெரிக்க பொருளியல் உறவு வலுப்பெறும்
3 May 2017 06:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 May 2017 06:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!