இரண்டு கொள்ளை சம்பவங்களின் தொடர்பில் 29 வயது ஆடவர் கைது

ஹவ்காங் அவென்யூ 7, ஜாலான் சுல்தான் ஆகிய பகுதிகளில் இரண்டு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற செவ்வாய்க்கிழமை 27 வயதான பெண்மணியின் ஆபரணம், பணம் ஆகியன ஹவ்காங் அவென்யூ 7ல் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் செய்தார். சென்ற வெள்ளிக்கிழமை ஜாலான் சுல்தானில் 31 வயதுப் பெண்மணியிடமிருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டதாகவும் புகார் பெறப்பட்டது. இவ்விரு கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டதாகக் கருதப்படுபவரது அடையாளம் ஒரே மாதிரியாக இருந்ததாக போலிஸ் அறிக்கை நேற்று தெரிவித்தது. தங்ளின் பிரிவு போலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு நேற்று முன்தினம் இரவு 8.10 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 6ல் ஆடவர் ஒருவரைக் கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!