புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையில் தடை

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை நேற்று மீண்டும் தடை பட்டது. ரயில் தடக் கோளாறு காரண மாக சேவையில் தடங்கல் ஏற் பட்டதாகப் பிற்பகல் 2.30 மணி அளவில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவிட்டர் மூலம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட 14 ரயில் நிலையங்களிலும் வழக்கமான, இடைவழிப் பேருந்து சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது. பிற்பாடு சுமார் 3.50 மணி அளவில் நிலவரம் பற்றி நிறு வனம் மேல்விவரம் வெளியிட் டது.

பிற்பகல் 1.45 மணிக்குக் கியட் ஹோங் நிலையத்திற்கு அருகில் சமிக்ஞை நிறுத்தற்குறி வில்லையை ஒரு ரயில் சேதப் படுத்திவிட்டதாக நிறுவனம் தெரிவித்தது. ஓட்டுநர் இல்லாத இலகு ரயில் எந்த இடத்தில் துல்லியமாக நிற்கவேண்டும் என்பதைக் காட்டுவதற்கு நிறுத் தற்குறி வில்லை பயன்படுத்தப் படுகிறது. பாதிக்கப்பட்ட ரயில் சோத னைக்காக சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் பொறியியல் குழுவினர் ரயில் சேவை முழுவதும் பாதுகாப்புச் சோதனை நடத்துவதாகவும் நிறுவனம் தெரிவித்தது. 2018-01-13 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!