சிங்கப்பூரின் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அது இம்மாதம் பிற்பகுதி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தேர்தல் துறை இன்று தெரிவித்தது.
பொதுத்தேர்தல் கடைசியாக 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. ஏப்ரல் 2012ஆம் ஆண்டுக்குள் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற வேண்டும்.
இதற்கிடையே, ஈஸ்ட் கோஸ்ட் தேர்தல் பிரிவுக்குள் பெட்ரா பிராங்கா தீவு சேர்க்கப்பட்டுள்ளதாக மின்னியல் அரசிதழ் குறிப்பிட்டுள்ளது.