தொடக்கப்பள்ளி மாணவியாக இருந்தபோது, தன் தாயாரின் வற்புறுத்தலால் பிரீத்தி திலகர், ‘தெக்வாண்டோ’ வகுப்பில் சேர்ந்தார். ஆனால் தொடக்கக்கல்லூரியில் ‘தெக்வாண்டோ’ இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்தபோதுதான் இந்தத் தற்காப்புக் கலையின் சிறப்புகளை அறிந்தார்.
தற்காப்புத் திறன்களுடன் மன உறுதி, ஒழுக்கம் ஆகியவற்றைத் தான் கற்றுக்கொண்டதாகக் கூறினார் 18 வயது பிரீத்தி.
புகுமுக வகுப்பு இரண்டாம் ஆண்டு பயில்வதால் அதிக நேரம் படிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட பிரீத்தி, ‘தெக்வாண்டோ’ இணைப்பாட நடவடிக்கை தனது மன உளைச்சலைக் குறைக்க உதவுவதாகக் கூறினார்.