உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று காற்பந்து ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா=இங்கிலாந்து அணிகள் மோதின-. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடாத நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளுமே முற்பாதி ஆட்டத்தைவிட பிற்பாதி ஆட்டத்தில்தான் கோல் போடுவதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொண் டன. இருப்பினும் ஆட்டம் முழுவதும் இங்கிலாந்து மூன்று முறை மட்டுமே கோல் போடும் முயற்சியை மேற்கொண்டது. இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் கோல் காப்பாளர் ஜோ ஹார்ட் ஸ்லோவேனியாவின் கோல் போடும் இரண்டு முயற்சிகளைத் தடுத்தார். குறிப்பாக, ஸ்லோவேனியாவின் ஜஸ்மின் குர்திக் உதைத்த பந்தைக் கோலாக விடாமல் சிறப்பாகத் தடுத்து விளையாடிய அவர் இங்கிலாந்தைத் தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
இறுதியில் ஆட்டம் சமநிலையில் முடிய, 7 புள்ளிகளுடன் 'எஃப்' பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தகுதிச் சுற்றில் 14 ஆட்டங்களாக பெற்று வந்த தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஐந்து புள்ளிகளுடன் ஸ்லோவேனியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அலர்டைஸ் நீக்கப்பட்ட பிறகு, நான்கு ஆட்டங்களுக்கு நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள சௌத்கேட் மால்டாவிற்கு எதிரான ஆட்டத்தை வென்ற பிறகு, ஸ்லோவேனி யாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரூனிக்குப் பதிலாக டோட்டன்ஹம் வீரர் எரிக் டியரை களமிறக்கினார். ஆனால் ஆட்டம் முடிய சுமார் 20 நிமிடங்கள் இருந்தபோது ரூனி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். அதன்பிறகு, ஸ்லோவேனியா கோல் காப்பாளரைத் தாண்டி கோல் போட அவர் மேற்கொண்ட முயற்சி வீணானது.
ஸ்லோவேனியா வீரர் உதைத்த பந்தைக் கோலாகவிடாமல் தடுத்து விளையாடிய இங்கிலாந்து கோல் காப்பாளர் ஜோ ஹார்ட். படம்: ராய்ட்டர்ஸ்